Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சோனாலி போகத் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.. பண்ணை வீட்டில் லேப்டாப் திருடியதாக புகார்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமும் நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முன்னதாக மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர்.
லிப்ரா ரவீந்தரை மணந்த விஜே மகாலக்ஷ்மி.. சோகத்தில் மூழ்கிய 90ஸ் கிட்ஸ்.. பறக்கும் கமெண்ட்ஸ்!
பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத்
பிரபல பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பார்ட்டி ஒன்றில் தனது நண்பர்களுடன் கலந்துக் கொண்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
சாவில் மர்மம்
ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சாவதற்கு முன்னதாக, தன்னுடைய அம்மாவில் போன் செய்த சோனாலி, தன்னுடைய உணவில் எதுவோ கலக்கப்பட்டுள்ளதாகவும் சாப்பிட்ட பின்பு தன்னுடைய உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததாகவும் சோனாலி சகோதரி போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்த கைது
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சோனாலியின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது
முன்னதாக சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உட்பட முக்கியப் பொருள்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுகுறித்து போலீசாரிடம் சோனாலியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுமா?
சோனாலி போகத் மர்ம சாவிற்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் விசாரணை கட்டத்திலேயே உள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு விசாரினையை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்