Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்!
சென்னை: தெலுங்கானாவில் 9 மாத குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் அண்மையில் 9 மாத பெண் குழந்தை அப்பகுதியை சேர்ந்த நபரால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகை ஸ்ரீரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி இதுபோன்ற மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து துடிக்க துடிக்க சுட்டுக்கொல்ல வேண்டும் என கொந்தளித்தார்.
பயம் வரும்
மேலும் இதுபோன்று செய்தால் தான் இந்த காமக் கொடூரர்களுக்கு பயம் வரும் என்றும் ஸ்ரீரெட்டி கூறினார். பாலியல் பலாத்காரங்களுக்கு சினிமா நடிகைகள் அணியும் உடை தான் காரணம் என பேசுகிறார்கள்.
செக்ஸ் உணர்வை தூண்டியிருக்குமா?
9 மாத குழந்தை செக்ஸ் உணர்வை தூண்டியிருக்குமா? 9 மாத குழந்தையை எப்படி பலாத்காரம் செய்ய தோன்றுகிறது. என்றும் சரமாரியாக சாடினார் ஸ்ரீரெட்டி. நடிகைகளின் அறைகுறை ஆடையால்தான் பலாத்காரங்கள் நடைபெறுவதாக கூறுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்றும் அவர் கேட்டார்.
பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
பெண்களை ஏமாற்றிய விஷால்
அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இல்லையெனில் விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.