Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்!
சென்னை: தெலுங்கானாவில் 9 மாத குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் அண்மையில் 9 மாத பெண் குழந்தை அப்பகுதியை சேர்ந்த நபரால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகை ஸ்ரீரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி இதுபோன்ற மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து துடிக்க துடிக்க சுட்டுக்கொல்ல வேண்டும் என கொந்தளித்தார்.
பயம் வரும்
மேலும் இதுபோன்று செய்தால் தான் இந்த காமக் கொடூரர்களுக்கு பயம் வரும் என்றும் ஸ்ரீரெட்டி கூறினார். பாலியல் பலாத்காரங்களுக்கு சினிமா நடிகைகள் அணியும் உடை தான் காரணம் என பேசுகிறார்கள்.
செக்ஸ் உணர்வை தூண்டியிருக்குமா?
9 மாத குழந்தை செக்ஸ் உணர்வை தூண்டியிருக்குமா? 9 மாத குழந்தையை எப்படி பலாத்காரம் செய்ய தோன்றுகிறது. என்றும் சரமாரியாக சாடினார் ஸ்ரீரெட்டி. நடிகைகளின் அறைகுறை ஆடையால்தான் பலாத்காரங்கள் நடைபெறுவதாக கூறுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்றும் அவர் கேட்டார்.
பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
பெண்களை ஏமாற்றிய விஷால்
அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இல்லையெனில் விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்