உங்க பூனை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.. ஸ்ரீரெட்டி போட்டோவை பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தனது பூனையுடன் இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களை பெருமூச்சு விட செய்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியே பெரும் பிரபலமாகிவிட்டார். தமிழ், தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த பெரிய நட்சத்திரங்கள் மீது இவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டால் இந்திய அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.
ஸ்ரீரெட்டி என்றாலே அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள்தான் நினைவுக்கு வரும் அளவுக்கு குற்றச்சாட்டுக்களை அள்ளிவிட்டார். பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் அதிரவிட்டார் ஸ்ரீரெட்டி.

உசுப்பேற்றும் ஸ்ரீரெட்டி
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். அவ்வப்போது ஒரு டைப்பான போட்டோவை போட்டு ரசிகர்களின் கமென்ட்டை கேட்டு உசுப்பேற்றி வருகிறார்.

மார்பில் போட்டு..
அந்த வகையில் தான் வளர்க்கும் வெள்ளை நிற பூனைக்குட்டி ஒன்றுடன் அவர் போட்டிருக்கும் போட்டோ அவரது ரசிகர்களை வயிறு எரிய வைத்துள்ளது. ஸ்ரீரெட்டி தான் வளர்க்கும் பூனைக்குட்டியை தனது மார்பில் போட்டு தூங்க வைத்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா..
மேலும் ஹீ.. ஹீ.. ஹீ.. புவர் கேட் என் இதயத்தை நன்கு புரிந்து வைத்துள்ளது. உங்களுக்கு தெரியுமா.. என் இதயம் மிகவும் அன்பானது.. என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

பெரிய இடத்தில்தான் தூங்குகிறது
ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் உங்கள் பூனை அதிர்ஷ்டசாலி என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த பூனை பெரிய இடத்தில்தான் தூங்குகிறது என்றும், பூனைக்கு நல்ல தலையணை கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குவியும் கமென்ட்ஸ்
ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ லைக்ஸை அள்ளியிருக்கிறது. ஏராளமான கமென்ட்ஸ்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











