நீ பண்ணல.. ஆனா அந்த லெஜன்ட் என்னை பழி வாங்குறாரு.. மீண்டும் பவன் கல்யாண் மீது பாய்ந்த நடிகை!
சென்னை: இயக்குநர் ஏஆர் முருகதாஸை தொடர்ந்து மீண்டும் பவன் கல்யாண் குடும்பத்தினரை வம்புக்கு இழுத்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video
நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியும் நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரையுலகையே அதிர வைத்தார்.
நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு மிட்டுமின்றி தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் பாலியல் புகார்களை கூறி மிரளவிட்டார்.

டபுள் மீனிங்
தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசியும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் உசுப்பேற்றி வருகிறார். அவ்வப்போது அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

மீடூவில் புகார்
பல தெலுங்கு நடிகர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தாலும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை உண்டு இல்லை என செய்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. ஏற்கனவே பவன் கல்யாண் மீது மீடூவில் புகார் கூறியிருந்தார்.

கர்ப்பமாக்கி உள்ளார்
பெண்களை மதிக்க தெரியாதவர் பவன் கல்யாண். பல இளம் பெண்களை மோசம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். வாழ்க்கையில் அவரால் ஒருபோதும் உயர முடியாது என பவன் கல்யாண் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பவன் கல்யாணையும் அவரது குடும்பத்தினரையும் வம்பிழுத்துள்ளார்.

பழிவாங்குகிறார்
இதுதொடர்பாக ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கும் பதிவில் மிஸ்டர் பிகே நீங்கள் பழிவாங்காத ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம், ஒரு லெஜன்ட்டான உங்களின் சகோதரர் சிரஞ்சீவி என்னை பழிவாங்குகிறார். இது ஒரு குடும்ப நாடகம் என பவன் கல்யாண் மட்டுமின்றி சிரஞ்சீவி மீதும் பாய்ந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

முருகதாஸ் மீது விளாசல்
நேற்றுதான் இயக்குநர் ஏஆர் முருகதாஸை இயக்குனர் முருகதாஸ், பெண்களை திருடுவதை போல கதைகளையும் திருடுகிறார். ஆனால், அவர்கள் எல்லாம் சினிமா ஜாம்பவான்களாம்.. பாவம் தமிழ் சினிமா என்று விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











