Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் ஏழரையை கூட்டும் ஸ்ரீரெட்டி.. பவன் கல்யாணை தொடர்ந்து பிரபல அரசியல் தலைவர்களையும் சீண்டல்!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பிரபல அரசியல் தலைவர்களையும் சீண்டியிருக்கிறார்.
Recommended Video
கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீரெட்டி அதிகம் செய்திகளில் அடிபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கில் அதிகம் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
போட்டோக்களுக்கு அவர் பதிவிடும் கேப்ஷன்கள் போட்டோக்களை தாண்டி படுகவர்ச்சியாக உள்ளது. போட்டோக்களை பதிவிடுவதோடு மட்டும் நிறுத்தாமல் நடிகர் நடிகைகள் என பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் தரக்குறைவாக விமர்சிப்பார்.
வீடியோக்கள்
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஸ்ரீரெட்டி, வழக்கத்தை விடவும் தற்போது பேஸ்புக்கில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி டிக்டாக் வீடியோவை வெளியிடும் ஸ்ரீரெட்டி, வீட்டில் என்ன செய்தாலும் அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஜாலி பண்ண யாருமில்ல
ஊரடங்கு உத்தரவால் வெளியாக போக முடியாமல் தவித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. நேற்று பேஸ்புக்கில் குறிப்பிட்ட கருத்தில் ஹுக்கா இல்லை, வீடு இல்லை, ட்ரிங்க் இல்லை.. ஜாலி பண்ணவும் யாருமே இல்லை.. பேட் வெரி பேட் என்று கூறினார்.
உள்ளூர் அரசியல்வாதிகள்
எப்போதும் செக்ஸ் குறித்தே பேசி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணை கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வருகிறார். இதுவரை உள்ளூர் அரசியல்வாதிகளை மட்டும் விமர்சித்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது தேசிய தலைவர்களையும் வம்பிழுத்துள்ளார்.
தவளை வாய்
அதாவது, கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியை விளாசி கருத்து பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அவரது பதிவில் ராகுல்காந்தி உங்களுடைய தவளை வாயை மூடுங்கள், மோடி எங்களை நல்ல படியாக கவனத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
ஆதரவும் எதிர்ப்பும்
இதேபோல் மற்றொரு பதிவில் சந்திரபாபு நாயுடுவை சாடியிருக்கிறார். அதாவது, சந்திரபாபு நாயுடு, கேசிஆரும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இரண்டு முதல்வர்களும் நல்ல முறையில் கையாள்கிறார்கள் நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் என்ற ரீதியில் மோசமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றது.