Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
ஐதராபாத்: திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் பிரபல நடிகை மீண்டும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர், நடிகை ஸ்ரீசுதா.
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி' படத்தில், தோழியாக நடித்திருந்தார்.
ஷ்யாம் கே.நாயுடு
மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், ஷியாம் கே.நாயுடு என்ற பிரபல ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷ்யாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
நெருங்கிப் பழகினார்
பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டே கே.நாயுடுவின் சகோதரர் இவர். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷனின் உறவினர். நடிகை ஸ்ரீசுதாவிடம், ஷ்யாம் கே.நாயுடு திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தாராம். இதையடுத்து அவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்வதாக
இருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். ஆனால், அவரை திருமணம் செய்ய ஷ்யாம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இனால் ஸ்ரீசுதா, ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், அவர் மீது புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டதாக அதில் கூறியிருந்தார்.
மோசடி கையெழுத்து
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷ்யாம் கே நாயுடுவை கைது செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் சமாதானமாகச் சென்றுவிடுவதாக, நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அதற்காக வழங்கப்பட்ட மனுவில், நடிகை ஸ்ரீசுதாவின் கையெழுத்தை மோசடியாகப் போட்டுள்ளதாகக் கூறப்பட்டு சர்ச்சையானது.
மீண்டும் புகார்
இந்நிலையில், நடிகை ஸ்ரீசுதா இப்போது போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் ஏதும் ஆனது என்றால், அதற்கு ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு, அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான் காரணம் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
தாக்கி மிரட்டினர்
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷ்யாம் கே நாயுடு வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவர் நண்பர்களும் உறவினர்களும், தன்னை தாக்கியதாகவும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியதாகவும் வெளியில் சொன்னால் உயிரோடு இருக்க முடியாது என்று கடுமையாக மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.