Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க.. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை!
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பிரபல நடிகை மீது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.
Recommended Video
நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை.
அரைநிர்வாண
ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறை அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. எப்போது யாரை பற்றி என்ன சொல்லுவாரோ பீதியில் இருந்தனர் பிரபலங்கள் பலர். தன்னை பயன்படுத்திவிட்டு வாய்ப்பு அளிக்கவில்லை எனக் கூறி ஹைதராபாத்தில் நட்ட நடு ரோட்டில் மேலாடையை அவிழ்த்து போட்டு அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்.
அடிக்கடி பிரச்சனை
அவரது இந்த போராட்டம் தேசிய அளவில் வைரலானது. அதன் பிறகு அங்கு சிலரால் விடுக்கப்பட்ட மிரட்டலால் உயிருக்கு அஞ்சி சென்னைக்கு குடி பெயர்ந்தார். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் வசித்து வரும் அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
சீரியல் ஷுட்
இதனால் நொந்து போன அப்பகுதி மக்கள், இது ஸ்ரீரெட்டி வசிக்கும் பகுதி எச்சரிக்கை என போர்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதில் சீரியல் ஷுட் நடத்திய அழகு சீரியல் குழுவினர் தனது காரை சேதப்படுத்தியதாக கூறி புகார் அளித்தார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து பவன் கல்யாணையும் சாடி வருகிறார் ஸ்ரீரெட்டி.
ஆபாச பேச்சு
அண்மையில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார் ஸ்ரீரெட்டி. இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேஷும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் ஸ்ரீரெட்டி பேசிய ஆபாச வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர். இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீழ்த்தரமாக..
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் "தெலுங்கு திரையுலகில் துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆண் நண்பர்கள்
தான் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவளிப்பதால், நடிகர் பவன் கல்யாணின் ஆதரவாளர்களான இருவரும் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எனது ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் தான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.
உயிருடன் கொளுத்த
மேலும் நான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர்? என்பது பற்றியெல்லாம் அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்கள். அது எனது தனிப்பட்ட விஷயம். அவர்கள், என் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று பேசுகின்றனர் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.