twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரதட்சணைக் கொடுமை.. கணவன் வீட்டு முன் 3வது நாளாக துணை நடிகை தர்ணா!

    By Shankar
    |

    Actress stages protest against her husband in front of the house
    சென்னை: வரதட்சணைக் கேட்டு தன்னை வீட்டில் சேர்க்காத கணவன் மற்றும் மாமியாருக்கு எதிராக துணை நடிகை மூன்றாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார்.

    ஆவடியில் உள்ள கணவன் வீட்டின் முன் தொடர்ந்து 3 நாட்களாக இந்த தர்ணாவை நடத்தி வருகிறார்.

    ஆவடி கோவர்த்தனகிரி கிருஷ்ணன் தெரு வில் வசிப்பவர் விஜயகுமார் (34). இவரது மனைவி கலைவாணி (31). தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் கலைவாணி.

    கலைவாணிக்கு பிறந்த குழந்தை இறந்தது. இதனால் கணவர் வீட்டில் அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். மேலும் வரதட்சணை கேட்டு கலைவாணியை மிரட்டியுள்ளனர்.

    நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்குச் சென்ற கலைவாணியை மாமியார் மரகதம் மிரட்டி, அங்கிருந்து விரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி தனது தாய் பிரேமாவுடன் ஆவடி காவல்நிலையத்துக்குச் சென்று கணவன் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் கொடுத்தார்.

    போலீசார் அந்தப் புகாரைப் பெறஅறு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இதற்கிடை யில், கலைவாணி நேற்று முன்தினம் முதல் கணவர் வீட்டின் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் சமாதானப்படுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 3வது நாளாக தர்ணாவில் கலைவாணி ஈடுபட்டுள்ளார்.

    English summary
    Kalaivaani, a junior artist of Tamil cinema is protesting against her husband and mother in law in front of their house for the past 3 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X