Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வரதட்சணைக் கொடுமை.. கணவன் வீட்டு முன் 3வது நாளாக துணை நடிகை தர்ணா!
ஆவடியில் உள்ள கணவன் வீட்டின் முன் தொடர்ந்து 3 நாட்களாக இந்த தர்ணாவை நடத்தி வருகிறார்.
ஆவடி கோவர்த்தனகிரி கிருஷ்ணன் தெரு வில் வசிப்பவர் விஜயகுமார் (34). இவரது மனைவி கலைவாணி (31). தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் கலைவாணி.
கலைவாணிக்கு பிறந்த குழந்தை இறந்தது. இதனால் கணவர் வீட்டில் அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். மேலும் வரதட்சணை கேட்டு கலைவாணியை மிரட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்குச் சென்ற கலைவாணியை மாமியார் மரகதம் மிரட்டி, அங்கிருந்து விரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி தனது தாய் பிரேமாவுடன் ஆவடி காவல்நிலையத்துக்குச் சென்று கணவன் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் கொடுத்தார்.
போலீசார் அந்தப் புகாரைப் பெறஅறு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடை யில், கலைவாணி நேற்று முன்தினம் முதல் கணவர் வீட்டின் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் சமாதானப்படுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 3வது நாளாக தர்ணாவில் கலைவாணி ஈடுபட்டுள்ளார்.