தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சர்ச்சை நாயகி
சென்னை: இங்கிருந்து சென்று பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை தயாரிப்பு நிறுவனம் துவங்கவிருக்கிறாராம்.
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அந்த நடிகைக்கு பாலிவுட் ஆசை வந்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அங்கும் பட வாய்ப்புகள் இன்றி திண்டாடி வருகிறார். அண்மையில் வந்த ஒரு வாய்ப்பும் வேறு நடிகைக்கு சென்றுவிட்டது.
இந்நிலையில் நடிகை விரைவில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறாராம். அந்த நிறுவனத்திற்கு தனது தந்தையை எம்.டி. ஆக ஆக்கப் போகிறாராம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை.
அம்மணி சென்னையில் 4 பங்களாக்கள், நிலம் என்று ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளாராம். அப்படி என்றால் மீண்டும் சென்னையில் வந்து செட்டிலாகிவிடுவாரோ?
Comments


Click it and Unblock the Notifications