Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஞ்சு மாசத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பு... நடிகை சுஜா முடிவு
சென்னை: ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாகத் நடிகை சுஜா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவரும், சிங்ககுட்டி படத்தில் நடித்த சிவாஜி தேவ் என்கிற சிவகுமாரும் காதலித்து வந்தனர். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் இவர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட ஏராளமான திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர். பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சுஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் இவரது அதிக புகழ் கிடைத்தது.
இந்நிலையில் சுஜாவுக்கு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு அத்வைதா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது குழந்தையை கவனித்து வருகிறார் சுஜா.
சென்னையை விட ஷிமோகாவில் வெறித்தனம் காட்டிய ரசிகர்கள்.. விஜய்க்காக கிரேனில் வந்த பிரம்மாண்ட மாலை
மீண்டும் நடிப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, இதுதான் குழந்தையை கவனித்துக்கொள்ளும் நேரம். இது இனிமையான பொழுதாக இருக்கிறது. இப்போது திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க அழைப்பு வருகிறது. ஒரு வருடம் குழந்தையை கவனிக்க முடிவு செய்துள்ளதால் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் நடிப்பைத் தொடரலாம் என இருக்கிறேன் என்றார்.