Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிரூபிக்கும் முன்பு குற்றவாளி என்பது தவறு.. ரியா சக்ரவர்த்திக்காக வரிந்துக்கட்டும் டாப்ஸி!
மும்பை: குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரை தண்டிக்க நீதித்துறையை முந்தக்கூடாது என ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீதுதான் ரசிகர்களும் அவரது குடும்பத்தினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதற்கு பொறுத்தமாக ரியா சக்கவர்த்தி வாட்ஸ் அப் சாட்டுகள் வைரலாகி வருகிறது. சிபிஐயும் தொடர்ந்து 5 நாட்களாக ரியா சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
கசப்பில் முடிந்தது காதல்.. பாடகரை திருமணம் செய்த பிரபல நடிகை விவாகரத்து.. திரையுலகில் பரபரப்பு
பாலிவுட் பிரபலங்கள்
சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ரியாவே சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என அவர் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கூட ரியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்.
லக்ஷ்மி மஞ்சு ஆதரவு
சில ஊடகங்கள் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையிலும் இறங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை லக்ஷ்மி மஞ்சு, ரியாவுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். ரியாவை ஊடகங்கள் அரக்கி போல சித்தரிப்பதாகவும், இதனால் அவரது குடும்பம் எப்படியான வலியை அனுபவிக்கும் என்றும் கேட்டிருந்தார்.
தனிப்பட்ட முறையில் தெரியாது
உண்மை வெளியே வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை டாப்ஸியும் ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். லக்ஷ்மி மஞ்சுவின் கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள டாப்ஸி, எனக்குத் தனிப்பட்ட முறையில் சுஷாந்தையோ, ரியாவையோ தெரியாது.
சட்டத்தை நம்புங்கள்
ஆனால் எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரைத் தண்டிப்பதற்காக நீதித்துறையை முந்திக்கொள்வது எவ்வளவு தவறு என்பதைப் புரிந்துகொள்ள மனிதம் போதும். உங்களின் நல்லறிவுக்காகவும், இறந்தவரின் கண்ணியத்துக்காகவும் உங்கள் நாட்டின் சட்டத்தை நம்புங்கள் என தெரிவித்துள்ளார்.