Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உயிரை விட வேற என்ன முக்கியம்? படிக்காத கிராம மக்களே வேலி போட்டு வச்சுருக்காங்க.. பிரபல நடிகை பொளேர்!
சென்னை: உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் முடங்கி போயுள்ளன. உலகம் முழுக்க இதுவரை ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிலர் அதனை பொருட்படுத்தாமல் வெளியே சுற்றி வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை தமன்னாவும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும் முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு.
கண்ணீருடன் நண்பனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்.. பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது சேதுவின் உடல்!
நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை. நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் வீட்டிலிருக்க ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள் வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.