Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாரம் ரூ. 15,000 சம்பளத்துக்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நடிகை தாரா!
மிகப் பெரிய அளவில் தனது விபச்சாரத் தொழிலை தாரா நேர்த்தியாகவும், பிரமாண்டமான அளவிலும் நடத்தி வந்துள்ளார். அவரது விபச்சாரத் தொழிலுக்கு அரசியல்வாதிகள், காவல்துறையினர் என சகல தரப்பினரும் உறுதுணையாக இருந்து ஓஹோவென தொழில் நடக்க உதவியுள்ளனர்.
மார்ச் 31ம் தேதி கைது செய்யப்பட்ட தாரா குறித்து தற்போது பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விஐபிக்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளிடம் பெண்களை அனுப்பிவைப்பது அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் தாரா ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் பிரபலமான ஒரு தெலுங்கு நடிகரும், தாராவின் வலையில் சிக்கி வீழ்ந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதை விட சுவாரஸ்யமாக, அந்த நடிகரின் மனைவிதான், தாராவை அணுகி தனது கணவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
அந்த நடிகருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி மோதல் மூண்டுள்ளதாம். இதனால் தன்னை எங்கே கணவர் விவாகரத்து செய்து விடுவாரோ என்று பயந்துள்ளார் மனைவி. இதையடுத்து தாராவை அணுகிய அவர், தனது கணவர் வேறு பெண் பக்கம் திரும்பி விடாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தாரா அந்த நடிகருக்கு காதல் வலை வீசி தனது பக்கம் திருப்பி விட்டாராம்.
தாராவிடம் பெரும் சந்தோஷத்தைக் கண்ட அந்த நடிகரும், தாராவைத் தவிர வேறு யார் பக்கமும் திரும்பாமல் இருந்து வந்தார். மேலும் தாராவை பெரிய நடிகையாக்குவதாகவும் உறுதியளித்து வந்தாராம்.
அத்தோடு நில்லாமல், தனது நண்பர்கள், திரையுலகினர் சிலருக்கும் தாராவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் சந்தோஷம் காட்டியுள்ளார் அந்த நடிகர்.
இந்த நிலையில் தாராவின் விபச்சார நெட்வொர்க் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமை, ஏழ்மையில் வாடும் அழகான பெண்களாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துள்ளார் தாரா. அவர்களுக்குப் பணத்தாசை காட்டியும், சொகுசாக வாழலாம் என்று ஆசை காட்டியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அந்தப் பெண்கள் தன்னை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாரத்திற்கு ரூ. 15,000 வரை சம்பளம் போல கொடுத்து வந்துள்ளார்.
தாராவின் இந்த நாசத் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஹனீப், வியாபாரி ஜெயந்த், பிரிமீளா என்பவர் ஆகியோரே. இதில் ஜெயந்த்தின் பங்களாவைத்தான் தனது விபச்சார விடுதியாக தாரா பயன்படுத்தி வந்துள்ளார்.
இங்குதான் அரசியல் பிரமுகர்கள் முதல் காவல்துறையினர், தொழிலதிபர்கள், சினிமாத்துறையினர் என பலரையும் இழுத்து வந்து தொழிலை நடத்தியுள்ளார்.
தனது தொழிலுக்குப் பாதுகாப்பாக, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார். தாராவிடம் விழுந்த ஒரு காங்கிரஸ் தலைவர் மூலம்தான் ரெட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் தாரா என்கிறார்கள்.
தாராவுடன் தொடர்புடைய அத்தனை பேரையும் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளனராம். குறிப்பாக அந்த நடிகரையும் பிடிக்கவுள்ளதாக கூறப்படுவதால் ஆந்திர திரையுலகம் பரபரப்பாகி கிடக்கிறது.