Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாராவின் 'அறம்' படத்தில் இதெல்லாம் சுத்தமா பிடிக்கல - பிரபல நடிகை அதிரடி ட்வீட்!
சென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் 'அறம்'. இந்தப் படம் அழுத்தமான கதையால் ரசிகர்களிடத்தில் பாராட்டுகளைப் பெற்றது.
அரசைக் கேள்வி கேட்கும் விதத்தில் இருந்தாலும் பிரச்சார நெடி இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது 'அறம்' திரைப்படம்.
இப்படத்தை அண்மையில் பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அறம்' படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
|
அறம் பார்த்தேன்
"அறம் படம் பார்த்தேன். கலெக்டர் ரோலில் நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர். நயன்தாரா சேலையில் மிகவும் அழகாக இருக்கிறார்" என ட்வீட் செய்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
|
பிடிக்காத விஷயம்
படத்தில் எனக்குப் பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது விஷயம், படத்தின் இறுதியில் தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் ஹீரோ... ஆனால், அவனை கொண்டாவில்லை என்பது வருத்தம்.
நயன்தாரா காலில் விழவேண்டுமா
பிடிக்காத இரண்டாவது விஷயம் குழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யாமல் நயன்தாரா காலில் விழ வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
|
லேடி சூப்பர்ஸ்டார் வேண்டாமே
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 'லேடி சூப்பர்ஸ்டார்' எனும் சுமையை நயன்தாரா தலையில் வைக்கவேண்டாம். இந்தப் பட்டத்திற்காக அவர் சில கதாபாத்திரங்களை ஏற்கவேண்டி இருக்கும். அது அவரது திறமையையும், நடிப்பையும் பாதிக்கும். எனத் தெரிவித்துள்ளார்.