Just In
- 9 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 9 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 11 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 12 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி!
பெங்களூரு: பிரபல நடிகையின் கார் மோதிய விபத்தில் பெண் அதிகாரி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை உமாஶ்ரீ. ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தார்.

நேருக்கு நேர் மோதல்
இவருக்குச் சொந்தமான கார், கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம் கதக்கில் இருந்து உப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றார். ஆனால் நடிகை உமாஸ்ரீ காரில் இல்லை. பாண்டிவாடா பகுதியில் சென்ற போது, இவர் காரும் எதிரில் வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதின.

முன்பகுதி நொறுங்கியது
மோதிய வேகத்தில் இரண்டு காரின் முன்பகுதி நொறுங்கியது. உமாஶ்ரீ கார் டிரைவர் சிவக்குமார் காயத்துடன் தப்பினார். மற்றொரு காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பல்லாரி நோக்கி
போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உமாஶ்ரீ, காருடன் விபத்தில் சிக்கிய கார், உப்பள்ளியில் இருந்து பல்லாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்மிதா குட்டி என்பவருக்கு சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.

விபத்து சம்பவம்
இந்த விபத்தில் ஸ்மிதா குட்டியின் தாய் ஷோபா குட்டி, டிரைவர் சந்தீப் ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தத ஸ்மிதா குட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.