அய்யய்யோ.. யாராவது எட்டிப் பார்த்துட போறாங்க.. நடிகையின் போட்டோவை பார்த்து பதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் வித்தியாசமான உடையை பார்த்த நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர்.
நடிகை ஊர்வசி ரவுட்டேலா மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை குவித்திருக்கிறார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். ஆனால் பட்டத்தை தட்டிச்செல்ல முடியாமல் போனது.

ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ்
தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் ஊர்வசி ரவுட்டேலா சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4, பாகல்பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் விர்ஜின் பானுப்பிரியா படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் யுனிவர்ஸ்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டில் முடங்கியிருக்கும் ஊர்வசி தனது பயைழ போட்டோக்களை த்ரோபேக் என ஷேர் செய்து பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்ககேற்று இந்தியா டேக்குடன் பிகினி அணிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

உடம்பில் ஒட்டாமல்
இந்நிலையில் வித்தியாசமான போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. அதில் பாட்டமில் நிக்கர் போன்ற உடையும், டாப்பில் எதுவும் அணியாமல் அட்டை போன்ற ஒரு உடையை அணிந்துள்ளார். அந்த அட்டை உடம்பில் எங்கும் ஒட்டாமல் விரைப்பாக முன்னழகை மறைத்தப்படி நிற்கிறது.

யாஷிகா லைக்ஸ்
மேலும் பாட்டத்தில் வளையங்கள் கோர்க்கப்பட்டது போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் துணியை கட்டியிருக்கிறார். அவரது இந்த உடையை பார்த்த நெட்டிசன்கள், என்ன உடை இது யாராவது எட்டிப்பார்த்து விடப் பார்த்துவிடப் போகிறார்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என கூறியுள்ளனர். ஊர்வசியின் இந்த போட்டோவை நடிகை யாஷிகா ஆனந்த லைக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











