பளபளக்கும் முதுகை காட்டி… சேலையில் கவிதைபாடும் வாணி போஜன்… வைரல் பிக்ஸ் !
சென்னை : வாணி போஜன் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.
விமான பணிப்பெண்ணான இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்
பின்னர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மாடலிங்
ஊட்டியில் பிறந்த வாணிபோஜன் கிங்பிஷர் மற்றும் இண்டிகோ விமானத்தில் பணி பெண்ணாக தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கிய இவர், பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

சத்யாவாக அனைவர் மனதிலும்
இதையடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் நடித்தாலும் பெரிதாக பெயர் இல்லை. இதையடுத்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. இதையடுத்து லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் நடித்தார்.

சின்னத்திரை நயன்தாரா
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார் . அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
சிவப்பு நிற சேலையில்
இதையடுத்து, கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கும் அருள்வாய், காசிமேடு, சியான் 60 என பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படுபிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் சிவப்பு நிற சேலையில், விபூதி, குங்குமம் வைத்து அழகு பதுமையாக இருக்கும் போட்டோஷூட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











