Don't Miss!
- News கார்த்தி சிதம்பரம்.. ஆற்றல் அசோக்குமார் எல்லாம் ஒன்னுமே இல்ல.. பெரும் பணக்கார வேட்பாளர் இவர்தான்!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மூன்றாவது திருமணம்.. சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றிய சூர்யா தேவி.. போலீஸில் புகார் அளித்த வனிதா!
சென்னை: சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய பெண்ணின் மீது நடிகை வனிதா விஜயக்குமார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்ததும் அதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சசைகளும்தான் தற்போது ஹாட் நியூஸாக உள்ளது.
வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் வனிதா, தன்னை விமர்சிப்பவர்களை வெளுத்து வாங்கி வருகிறார்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பிரபலமான சூர்யக்குமாரி என்ற பெண் வனிதாவையும் அவரது மூன்றாவது திருமணத்தையும் கடுமையாக விமர்சித்தார். தகாத வார்த்தைகளாலும் வனிதாவை திட்டி தீர்த்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நடிகை வனிதா, தன்னை பற்றி அவதூறாக பேசிய சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'சமூக வலைதளத்தில், சூர்யாதேவி என்ற பெண், தன்னை அவதுாறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வனிதா புகார் அளித்துள்ள சூர்யா தேவி ஏற்கனவே தற்போது தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்ததாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.