Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மூன்றாவது திருமணம்.. சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றிய சூர்யா தேவி.. போலீஸில் புகார் அளித்த வனிதா!
சென்னை: சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய பெண்ணின் மீது நடிகை வனிதா விஜயக்குமார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்ததும் அதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சசைகளும்தான் தற்போது ஹாட் நியூஸாக உள்ளது.
வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் வனிதா, தன்னை விமர்சிப்பவர்களை வெளுத்து வாங்கி வருகிறார்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பிரபலமான சூர்யக்குமாரி என்ற பெண் வனிதாவையும் அவரது மூன்றாவது திருமணத்தையும் கடுமையாக விமர்சித்தார். தகாத வார்த்தைகளாலும் வனிதாவை திட்டி தீர்த்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நடிகை வனிதா, தன்னை பற்றி அவதூறாக பேசிய சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'சமூக வலைதளத்தில், சூர்யாதேவி என்ற பெண், தன்னை அவதுாறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வனிதா புகார் அளித்துள்ள சூர்யா தேவி ஏற்கனவே தற்போது தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்ததாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.