Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அவதூறு பரப்புகிறார்கள்.. கஸ்தூரி உட்பட 3 பேர் மீது போலீஸில் வனிதா புகார்.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகை வனிதா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவரை மீட்டு தருமாறு போலீஸில் புகார் அளித்தார்.
இதனால் இந்தப் பிரச்சனை பெரும் பூதாகரமானது. பலரும் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்தனர்.
சாக்கடைல காலை விட்டாச்சு..கிளீன் பண்ணாம வர முடியாது.. வனிதா மேட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் சுரீர்!
ஏற்கனவே புகார்
குறிப்பாக யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி, வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். தயாரிப்பாளர் ரவீந்தர் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் கடுப்பான வனிதா, சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது போலீஸில் புகார் அளித்தார்.
இழிவான வார்த்தைகள்
இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் நேர்க்காணலில் பங்கேற்றார். அப்போது எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசினார். இழிவான வார்த்தைகளால் படு மோசமாக பேசினார் வனிதா.
விலகிய வனிதா
அந்த வீடியோக்கள் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகை வனிதா, கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வனிதா டிவிட்டரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.
வனிதா புகார்
இந்நிலையில் நடிககைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி மற்றும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் வனிதா. இவர்கள் மூவரும் தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் வனிதா.