Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவதூறு பரப்புகிறார்கள்.. கஸ்தூரி உட்பட 3 பேர் மீது போலீஸில் வனிதா புகார்.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகை வனிதா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவரை மீட்டு தருமாறு போலீஸில் புகார் அளித்தார்.
இதனால் இந்தப் பிரச்சனை பெரும் பூதாகரமானது. பலரும் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்தனர்.
சாக்கடைல காலை விட்டாச்சு..கிளீன் பண்ணாம வர முடியாது.. வனிதா மேட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் சுரீர்!
ஏற்கனவே புகார்
குறிப்பாக யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி, வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். தயாரிப்பாளர் ரவீந்தர் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் கடுப்பான வனிதா, சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது போலீஸில் புகார் அளித்தார்.
இழிவான வார்த்தைகள்
இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் நேர்க்காணலில் பங்கேற்றார். அப்போது எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசினார். இழிவான வார்த்தைகளால் படு மோசமாக பேசினார் வனிதா.
விலகிய வனிதா
அந்த வீடியோக்கள் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகை வனிதா, கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வனிதா டிவிட்டரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.
வனிதா புகார்
இந்நிலையில் நடிககைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி மற்றும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் வனிதா. இவர்கள் மூவரும் தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் வனிதா.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!