Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எல்லோரையும் தேவையில்லாம இழுக்காத.. உன் வலியை நீதான் அனுபவிக்கனும்.. நடிகைக்கு பளீச் பதிலளித்த வனிதா!
சென்னை: தன்னை நெபோடிசம் புராடெக் என்று கூறிய நடிகை மீரா மிதுனுக்கு நடிகை வனிதா பளீச் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் மரணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் நெபோட்டிசம் இருப்பதாக கூறி வருகிறார் நடிகை மீரா மிதுன். மேலும் கோலிவுட் மாஃபியாக்கள் என நடிகர் விஜய் மற்றும் சூர்யாவையும் விமர்சித்து வருகிறார்.
அவர்களின் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.
வனிதா மீது பாய்ச்சல்
இந்நிலையில் நடிகை வனிதா, தமிழ் சினிமாவில் நெபோட்டிசம் உள்ளது என்பதை ஏற்க முடியாது, மீரா மிதுன் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று கூறினார். இதனால் ஆவேசமான மீரா மிதுன், நீங்களே ஒரு நெபோட்டிசம் புராடெக்ட்தான் ஆகையால் உங்களால் நான் சொல்வதை ஏற்க முடியாது என்று கூறி விளாசினார்.
வனிதா பதில்
இதனை பார்த்த வனிதாவின் ரசிகர்கள், அக்கா அவரை சும்மா விடாதீர்கள் என்று ஏற்றிவிட்டனர். இந்நிலையில் நடிகை வனிதா டிவிட்டரில் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " ஹாய் பேப்ஸ், நான் உங்கள் நம்பிக்கையையும் அணுகுமுறையையும் நேசிக்கிறேன்.. தொடர்ந்து செல்லுங்கள்..
உரிமை உண்டு
நீங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களே அப்படி இருங்கள். உங்கள் சாதனைகளை நான் மதிக்கிறேன்.. யாரையும் குறை சொல்லாமல் நம் வாழ்க்கையை வாழ்வோம். தொழில் ரீதியாக யாரையும் பற்றி பேச உங்களுக்கு உரிமை உண்டு.. என கூறியுள்ளார்.
என் அனுபவம்
மற்றொரு பதிவில், ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல.. ஒரு நபரின் குடும்பத்தை இணைத்து பேசுவது துணிச்சலானது அல்ல.. நீங்கள் உங்கள் அப்பாவைப் பற்றி உயர்வாக பேசியுள்ளீர்கள்.. அவர் உன்னை நன்றாக வளர்த்தார் என்பது எனக்குத் தெரியும்..நெபோட்டிசம் மற்றும் காஸ்டிங் கோச் என்பது தனிப்பட்ட அனுபவம், அனைவருக்கும் அவர்களின் அனுபவத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.. என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்லும் கருத்து..
தொடர்ந்து சாதியுங்கள்
மேலும் நெகட்டிவிட்டியை புறக்கணியுங்கள்.. அன்பை பரப்புவோம்.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.. அது கொஞ்சமும் சரியில்லை. ஆனால் ஒரு பரிந்துரை கூலாக இருங்கள். மேலும் உங்கள் போராட்டத்தில் யாரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்.. உங்கள் வலியை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்.. தொடர்ந்து சாதியுங்கள்.. தொடர்ந்து செல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.. ஆல் த பெஸ்ட்.. இவ்வாறு நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.