Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவரும் ஆம்பளதானே.. பீட்டர் குடிக்கவும் ஸ்மோக் பண்ணவும் காரணம் மீடியாக்கள்தான்.. பழி போட்ட வனிதா!
சென்னை: பீட்டர் பால், மீண்டும் சரக்கடிக்கவும் ஸ்மோக் பண்ணவும் மீடியாக்களும் சோஷியல் மீடியாக்களும் தான் காரணம் என நடிகை வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பீட்டர் பால் மீண்டும் போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும், தன்னை விட அவருக்கு மது மற்றும் சிகரெட் மீது மட்டுமே அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒரு முறை குடித்தார்
தங்கள் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது முதல் பீட்டர் பாலை தான் இப்படி பார்த்தது இல்லை என்றும், திருமணத்திற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் இப்படி குடித்தார். அதுவும் எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு குழப்பத்தால்தான்.
சந்தேகம் வரவில்லை
எனக்கு அவர், ஒரு நல்ல அப்பாவாகதான் தெரிந்தார். நல்ல ஹஸ்பெண்ட் மெட்டிரியலாகதான் தெரிந்தார். ஆகையால் தான் அவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டேன். இருந்த போதும் அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
குடிக்கவில்லை
அவருக்கு கெட்ட பழக்கங்கள் இருந்தது, 7 வருடங்களாக ஹோட்டலில் தான் சாப்பிட்டுள்ளார். அவர் சில பிரச்சனைகள் மற்றும் ஸ்ட்ரெஸால் குடித்துள்ளார். அவரை சுற்றியிருந்த நண்பர்களும் அவர் குடிப்பதில்லை என்று கூறினர். என் கண் முன்னாடி அவர் குடிக்கவில்லை.
அதிக மன அழுத்தம்
ஆனால் ஸ்மோக் பண்ணிக்கொண்டிருந்தார். குறிப்பாக கொஞ்ச நாட்களாக மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களில் அவரைப் பற்றி மீம்ஸ் ட்ரோல்ஸ் என வெளியானதால் அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் ஸ்மோக் பண்ணியிருக்கிறார். அதுவும் என் முன்னாடி இல்லை என் பின்னாடிதான்.
ஹார்ட் அட்டாக்
வேலைக்கு போகும்போது ஸ்ட்ரெஸ்ல அவர் அதை பண்ணியிருக்கார். 24 மணி நேரமும் அவரை பின்தொடர அவர் ஒன்றும் குழந்தையில்ல. ஆனாலும் நாங்கள் சந்தோஷமாகதான் இருந்தோம். அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு..
இருமி ரத்தம் கக்கி
பெரிய அறுவை சிகிச்சை நடக்க வேண்டியது.. ஆனால் சின்னதாக முடிந்து விட்டது.. கடவுள் காப்பாத்தி விட்டார். ஆனால் அவரால் ஸ்மோக்கிங் விட முடியவில்லை. அடுத்த 15 நாட்களுக்குள்ளேயே மீண்டும் இருமி இருமி சினிமாவில் ரத்தம் கக்கி கக்கி சாகுறமாதிரி பார்த்தேன்.
உங்க நினைப்புல வாழ இல்ல
கை காலில் விழுந்து கெஞ்சினேன், ஸ்மோக் பண்ணாதீர்கள் என்று கெஞ்சினேன். ஒரு மனுஷன் கூட நிக்கனும்னுதான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க செத்தப் பிறகு உங்க நினைப்புல வாழறதுக்கு இல்லன்னு எவ்ளோவோ கெஞ்சினேன்.
அவரும் ஆம்பளைதானே
என் பிறந்தநாள் வந்தது, சரி வீட்டிற்குள்ளேயே அடைஞ்சு இருந்துக்கிட்டு டிப்ரஷன், கமெண்ட்ஸ் மீடியா இதெல்லாம் பார்த்து அவருக்கு எவ்ளோ அசிங்கமா இருந்திருக்கும். அவரும் ஆம்பளைதானே.. வேலைக்கு போகும் போது அவருக்கும் எவ்ளோ அசிங்கப்பட்டிருப்பார் என கேட்டுள்ளார்.