என் அம்மாவின் பரிசு.. வனிதா திருமணத்திற்கு வந்து சேர்ந்த வைர மோதிரங்கள்.. யார் மூலமான்னு பாருங்க!
சென்னை: நடிகை வனிதா நாளை தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துக்கொள்ள நிலையில் அவருக்கு வைர மோதிரங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா நாளை மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவரது காதலரான பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை திருமணம் செய்கிறார்.
ஏற்கனவே ஆகாஷ், ஆனந்த் ராஜன் ஆகிய இருவரை திருமணம் செய்தார். முதல் கணவரான ஆகாஷுடன் இரண்டு குழந்தைகளை பெற்றார்.

போலீஸ் கேஸ்
ஆனால் அந்த காதல் பாதியிலேயே முறிந்தது. இந்நிலையில் நடிகை வனிதா நாளை மூன்றாவது திருமணம் செய்யவுள்ளார். சொத்துப்பிரச்சனையால் வனிதா, தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதோடு போலீஸ் கேஸ் என்றும் அலைந்தார்.

வாழ்க்கை துணை
இதனால் வனிதா குடும்பத்தினர், அவர் மீது சரியான கடுப்பில் உள்ளனர். அவர்களுக்குள் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் உள்ளது. குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததால்தான் தனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார் வனிதா.

அம்மாவின் பரிசு
வனிதாவின் திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த கருத்தும் கூறாமல் உள்ளனர். இந்நிலையில் நடிகை வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா தனது திருமணத்திற்காக வைர மோதிரங்களை பரிசளித்திருப்பதாக கூறியுள்ளார்.

அம்மாவின் தோழி
மேலும் இதுதொடர்பாக போட்டோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த மோதிரங்கள் வந்து சேர்ந்து விட்டன. அம்மாவின் தோழி எனக்கு பரிசாக இந்த மோதிரங்களை அனுப்பியுள்ளார் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வாழ்த்தும் ஆசிர்வாதங்களும்
இதனை பார்த்த நெட்டிசன்கள் மஞ்சுளா அம்மாவே மேலோகத்தில் இருந்து வனிதா அக்காவை வாழ்த்தியிருக்கின்றனர். நாமும் வாழ்த்துவோம் என வாழ்த்தி வருகின்றனர். மேலும் உங்கள் அம்மாவின் வாழ்த்தும் ஆசிர்வாதங்களும் எப்போதும் உங்களுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











