Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒன்றாக சரக்கடிக்கும் நாஞ்சில் விஜயன்- சூர்யாதேவி.. இதுதான் தமிழ் கலாச்சாரமா என விளாசிய வனிதா!
சென்னை: விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் ஒன்றாக சரக்கடிக்கும் போட்டோவை ஷேர் செய்து இதுதான் தமிழ் கலாச்சாரமா என விளாசியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
23 வயதில் மகன், வயதுக்கு வந்த மகள் என உள்ள வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
பிரபலங்கள் ஆதரவு
பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னுடைய கணவரை மீட்டுத் தருமாறு போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வனிதாவின் திருமணம் ஹாட் டாப்பிக்கானது. யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி, நடிகைகள் லக்ஷ்மி ராம கிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் எலிசபெத்துக்கு ஆதரவாக பேசினர்.
கடும் விமர்சனம்
இதனால் கடுப்பான வனிதா அவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேர்காணலின் போது கெட்ட வார்த்தையிலும் பேசி திட்டி தீர்த்தார். இதனால் சமூக வலைதளங்கள் அல்லோகளப்பட்டது.
ஓயாத சண்டை
தொடர்ந்து நான்கு பேர் மீதும் தன்னை பற்றி அவர்கள் அவதூறாக பேசுவதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.
வனிதா போட்டோ
வனிதாவைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி வனிதாவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வனிதா தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து சரக்கடிக்கும் போட்டோவை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.
இதுதான் கலாச்சாரமா?
இந்நிலையில் அதற்கு பதிலாக நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் ஒன்றாக சேர்ந்து சரக்கடிக்கும் போட்டோவை நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் இருவரும் கையில் சரக்கு கிளாஸ் உடன் நெருக்கமாக அமர்ந்துள்ளனர். இந்த போட்டோவை ஷேர் செய்த வனிதா, இதுதான் தமிழ் கலாச்சாரம், பழக்கவழக்கமா என விளாசியுள்ளார்.
கண்ணியத்துடன் வாழ்கிறேன்
மேலும் ஒரு பெண்ணை எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிப்பது, தனது கொடூரமான கடந்த காலத்தின் மூலம் தைரியமாக தப்பிப்பிழைத்து, இன்னும் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுசென்று ஒருபோதும் தனது வாழ்க்கையையோ குழந்தைகளையோ விட்டுக் கொடுக்கவில்லை, கண்ணியத்துடன் வாழ்வதாகவும் யாரையும் எதையும் அல்லது எங்கும் பெறவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.