twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைங்க யாருமே ஒழுங்கில்ல.. இப்படிதான் பேசுவாங்க.. வொர்த் இல்ல.. மீண்டும் லைவில் மிரட்டிய வனிதா!

    |

    சென்னை: மீண்டும் லைவில் பேசிய வனிதா விஜயகுமார் நடிகைங்க யாரும் ஒழுங்கில்லை என விளாசி தள்ளியிருக்கிறார்.

    Recommended Video

    Vanitha விடம் மன்னிப்பு கேட்ட Lakshmi Ramakrishnan, Kutti Padmini

    நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் மீண்டும் பிரபலமாகியிருக்கிறார். அவரது திருமணத்தால் நாள்தோறும் ஒரு பிரச்சனை எழுந்து வருகிறது.

    பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் வனிதாவின் திருமணம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் அவரது திருமணம் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தனது திருமணம் குறித்து விமர்சித்த தயாரிப்பாளர்.. கவின் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட நடிகை வனிதா! தனது திருமணம் குறித்து விமர்சித்த தயாரிப்பாளர்.. கவின் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட நடிகை வனிதா!

    பொட்டில் அடித்தாற்போல்

    பொட்டில் அடித்தாற்போல்

    அவர்களுக்கெல்லாம் பொட்டில் அடித்தாற் போல் பதில் சொல்லி மன்னிப்பு கேட்க வைத்து வருகிறார் வனிதா. இந்நிலையில் நடிகை வனிதா மீண்டும் லைவில் பேசியுள்ளார். அப்போது தனக்கு தேவையானதை தனது அம்மா யாரோ ஒருவர் மூலம் செய்கிறார் என்று கூறினார்.

    தெரியாதவங்கள பத்தி பேசாதீங்க

    தெரியாதவங்கள பத்தி பேசாதீங்க

    பின்னர் சம்பந்தமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோவத்தில் டேபிள் சேரை உடைத்த முகெனை வெற்றிப் பெற செய்தீர்கள் என்று பேசினார். தொடர்ந்து அவரைப் பற்றி இப்போது பேசுவது முட்டாள்தனம், அதைப்பற்றி பேசாதீர்கள் என்றார். தொடர்ந்து பேசிய வனிதா தெரியாதவங்கள பத்தி பேசாதீங்க, தெரியாத விஷயத்த பத்தி பேசாதீங்க என்று எச்சரித்தார்.

    யாருக்கு மரியாதை இருக்கு?

    யாருக்கு மரியாதை இருக்கு?

    சில நேரங்களில் சில மனிதர்கள், மனிதர்களில் இத்தனை நிறங்களா? இன்னைக்கு இருக்கீங்க, நாளை இருப்பீங்களா? உங்க குடும்பத்துல எல்லாரும் இருப்பாங்களா? என்ன வேணும்னாலும் நடக்கலாம். நான் ஒரு ஹியூமன் பீயிங், வுமன், தாய், மனைவி இந்த நேரத்தில் நான் லைவில் வந்து பேசுகிறேன். என்னுடன் பேசுகிறீர்கள். யார் பெரியவங்க, யாருக்கு மரியாதை இருக்கு.. எனக்கு இருக்குல்ல.

    கர்மா இஸ் பூமராங்

    கர்மா இஸ் பூமராங்

    வார்த்தை விடுறது ஈஸி.. பேசுங்க கமெண்ட் பண்ணுங்க, தவறா பேசதீங்க.. கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்காரு. கர்மா இஸ் பூமராங்.. அது எங்க வச்சு வாங்கும்னு தெரியும் தெரியாது. உங்களபத்தி நினைச்சா கவலையா இருக்கு.. நாளைக்கு என்ன நடக்குமோ.. நடந்தா கூட வெளியே வராது..

    பொறந்துக்கூட வர முடியாது

    பொறந்துக்கூட வர முடியாது

    உங்களுக்கு யாருமே இல்லாததால் இவ்வளவு வெறுப்பா இருக்கீங்க.. நீங்களும் யாரையாவது சேர்த்துக்குங்க. எல்லாருமே ஒவ்வொரு கேரக்டர். யாருமே தவறானவங்க கிடையாது. நான் என்னைப் பத்தி பேசல. வனிதா அக்காவ உடைக்கிறதுக்கு ஒருத்தர் பொறந்துக்கூட வர முடியாது. ஏன்.. எனக்கு முன்னாடி இப்படி ஒரு பொம்பளை இல்லன்னு கூட நான் சொல்லுவேன்.

    கடவுள் பாதி மிருகம் பாதி

    கடவுள் பாதி மிருகம் பாதி

    நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்ல. எடை போடாதீங்க எனக்கு வாரிசு இருக்கு. எத்தனை பேருக்கு இருக்குன்னு தெரியாது. நான் விக்டிமும் கிரிமினலும் இல்லை கடவுள் பாதி மிருகம் பாதி. எல்லாருக்குள்ளேயும் ஏஞ்சலும் இருக்கு டெவிலும் இருக்கு.. மத்தவங்கள பத்தி பேசி உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.

    நான் சிங்கப் பெண்

    நான் சிங்கப் பெண்

    நல்லவங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். தடங்கள் வரும். ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான். ரஜினி அங்கிளையே கமெண்ட் அடிக்குறீங்க. அவரு சென்சிட்டிவ் விஷயத்த பத்தி போஸ்ட் போட்டாரு. அதுக்கே அப்படி கமெண்ட் பண்றீங்க. நான் சிங்கப் பெண். சிங்கம் என்ன செய்யும் மானை வேட்டையாடி கிழிச்சு சாப்பிடும். தவறுதான் ஆனா அது உயிர் வாழனும்னா அது அப்படிதான் செய்யனும்.

    என்னை ஜட்ஜ் பண்ணாதீங்க

    என்னை ஜட்ஜ் பண்ணாதீங்க

    நான் சிங்கப் பெண்தான். அதுல பல பேர் பலி போனா அது எனக்கு தெரியாது. அவங்க மேல பல மிஸ்டேக்ஸ் இருக்கு அதை வச்சு என்னை ஜட்ஜ் பண்ணாதீங்க. அவங்க யாரும் ஒழுங்கு கிடையாது. நடிகைங்க இப்படிதான் பேசுவாங்க. செத்ததுக்கு அப்புறம் ரெஸ்ட் இன் பீஸ்னு சொல்வீங்க..
    கோவம் வருது. மைனஸ் இல்லன்னா ப்ளஸ் இல்ல.. ப்ளஸ் இல்லன்னா மைனஸ் இல்ல..

    வொர்த் கிடையாது..

    வொர்த் கிடையாது..

    பொம்பளைங்க எல்லாருமே தில்லா இருங்க யாருமே வொர்த் கிடையாது. கேள்வி கேப்பீங்க பதில் சொல்லலாமுன்னு வந்தேன். இங்க லவ் தான் வருது. இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும். கணவன் இறந்துட்டா பொட்ட அழிச்சு வலையள உடைப்பிங்க அதான் கல்ட்சரா? என்று விளாசியிருக்கிறார்.

    English summary
    Actress Vanitha slams actres says none of them is good. They speak like this. Vanitha Vijayakumar said this in live.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X