Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நல்லா வாய்ல வருது.. சாக்கடைங்க.. மகளுக்கு அட்வைஸ் கூறியவர்களை கிழித்து தொங்கவிட்ட வனிதா!
சென்னை: நடிகை வனிதா தனது மகளுக்கு அட்வைஸ் கூறியவர்களை கண்டபடி திட்டி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்தான நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா!
போலீஸில் புகார்
திருமணம் முடிந்த அடுத்த நாளே வனிதாவுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. அதாவது வனிதா திருமணம் செய்துள்ள பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என்று தெரிகிறது. அவரது முதல் மனைவியான எலிசபெத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வனிதா பதிலடி
இதனால் பலரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு நடிகை வனிதா, சமூக வலைதளங்களின் வழியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
மகளும் விளக்கம்
அந்த வகையில் தன்னுடைய திருமணம் குறித்து விமர்சித்தவர்களை விளாசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வனிதாவும் அவரது மகளும் சேர்ந்து பேசியிருகின்றனர். வனிதாவின் மகளான ஜோவிகா, தனது தாயின் திருமணத்திற்கு வாழ்த்து கூறியது திருமணத்திற்கு பிறகு தனது தந்தையை வரவேற்றது குறித்த தனது பதிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தீர்மானிக்க முடியாது
அதாவது தான் 10 வருஷத்துக்கு மேல் தனது அம்மாவுடன் இருப்பதாகவும், தனக்கு தன்னுடைய அம்மாவைப் பற்றி நன்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் தனது அம்மாவுக்கு தான் ஆதரவாக இருப்பதால் யாரும் தன்னை தீர்மானிக்க முடியாது என்றும் கூறினார்.
அட்வைஸ் வேண்டாம்
மேலும் என் அப்பா யார் என்று எனக்கு தெரியும்
என்றும் யாரும் தனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். பலர் என் அம்மா செய்வது தவறு என கூறுகிறார்கள். என் அம்மா என்ன செய்கிறார் என்பது எனக்கு தெரியும் என்றும் அவரை பற்றி தெரியாமல் யாரும் பேசக்கூடாது என்றும் கூறினார் வனிதாவின் மகள்.
நல்லா வாய்ல வருது
மேலும் பலர் அவரிடம் ஜாக்கிரதையாக இரு என எனக்கு அட்வைஸ் கூறுகிறார்கள். பெற்ற அப்பாவையே நம்பமுடியவில்லை என்கிறார்கள் என்றார் ஜோவிகா. உடனே குறுக்கிட்ட வனிதா, யோவ்.. நல்லா வாய்ல வருது என ஆவேசமாக பேசினார். ரொம்பவே தவறான கமெண்ட்டுகள் என்ற அவர், இந்த காலத்துல சொந்த அப்பாவையே நம்ப முடியல என்றும் சில கமெண்ட்டுகளை படித்தேன்.
Recommended Video
சாக்கடைங்க..
நீங்க கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டு உங்க புருஷன விட்டுட்டு போய்டுங்க ஏன்னா அப்பாவையே நம்ப முடியலல்ல.. எப்படிலாம் எழுதுறீங்க.. சாக்கடைங்க.. ஏன் மக்கள் மனச அழுக்காக்குறீங்க.. ரொம்ப தப்பு.. இப்படி பேசுறதெல்லாம் ரொம்பவே தப்பு என்று காட்டமாக கூறினார். மேலும் என்ன நடக்க வேண்டுமோ அது சட்டப்படி நடக்கும் என்று சிரித்தப்படியே நன்றி கூறி முடித்தார் வனிதா.