Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடனமாடிய கையோடு மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய வனிதா.. பிக்பாஸ் ஜோடிகள் புரமோ!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறிய புரமோ வெளியாகியுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களுடன் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் 4 சீசன்களில் பங்கேற்ற சில பிரபலங்கள் கலந்து கொண்டு ஜோடி ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ரொமான்ஸ் செய்த வனிதா.. ஜூலியை புகழ்ந்த ராஜமாதா.. பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ!
இன்றைய புரமோ
இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகியுள்ளது.
காவிய காதல் பாடல்கள்
வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடில், ரொமான்ஸ் ரவுண்டு உள்ளது. இதில் பழைய படங்களில் இடம்பெற்ற காவிய காதல் பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
இதில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம்ஜிஆர் மஞ்சுளா இணைந்து நடனமாடிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடலுக்கு வனிதாவும் சுரேஷ் சக்கரவர்த்தியும் நடனமாடியுள்ளனர்.
ரொமான்ஸ் ஃபார்மிங்
அவர்களின் பர்ஃமான்ஸ் அசத்தலாக இருந்ததாக நேற்று வெளியான புரமோவிலேயே நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இருவருக்குள்ளும் ரொமான்ஸ் ஃபார்மானதாகவும் கூறினார்.
50 வருடம் கழித்து
இந்நிலையில் இன்றைய புரமோவில் பேசியுள்ள வனிதா, செம பாடல், 50 வருடம் கழித்து அதே பாடலுக்கு நான் ஆடுகிறேன் என்றால் அது வேற லெவல் என்கிறார். அப்போது பேசும் ரம்யா கிருஷ்ணன், இதுபோன்ற ஒரு வாய்ப்பு எல்லா மகள்களுக்கும் கிடைக்காது என கூறுகிறார்.
கண்ணீர்விட்ட வனிதா
மேலும் இன்று வரை தான் மஞ்சுளாவை மிஸ் பண்ணுவதாகவும் அவரை போன்ற ஒரு மனுஷியை பார்க்க முடியாது என்றும் புகழாரம் சூட்டுகிறார். அப்போது மேடையில் உள்ள ஸ்க்ரீனில் மஞ்சுளாவின் போட்டோ இடம்பெற கண்ணீர்விட்டு கதறுகிறார் நடிகை வனிதா.
தனியாக வசிக்கும் வனிதா
குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதால் நடிகை வனிதா விஜயகுமார் யாருடனும் தொடர்பில்லாமல் உள்ளார். மேலும் இதுவரை செய்த 3 திருமணங்களும் விவாகரத்தில் முடிய வயதுக்கு வந்த 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!