Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மனஉளைச்சலில் சாவுங்க.. விஜய் டிவியை வம்புக்கு இழுக்கிறாரா வனிதா.. எதுக்கு இப்படி ஒரு பதிவு?
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா மனஉளைச்சலில் சாவுங்க என்ற பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக முடிந்தது. இதில், ராஜூ டைட்டில் வின்னர் ஆனார், 2வது இடத்தை பிரியங்காவும், 3வது இடத்தை பவானியும் பெற்றனர்.
குத் வித் கோமாளி 3 ல் என்ட்ரி கொடுக்கும் டாப் ஹீரோ... சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானது.
பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சீசன் 1லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.
வனிதா வெளியேறினார்
முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். அடுத்து சுஜா வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரம், யாரும் எதிர்பார்க்க படி, டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபினய் எலிமினேட் ஆனார்கள். இதையடுத்து, வனிதா விஜயகுமார் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறினார்.
முதுகில் குத்துகிறார்கள்
வனிதாவுக்கு ஆதரவளித்து அனைத்து போட்டியாளர்களும் பேசி வந்த நிலையில், திடீரென அனைவரும் அவருக்கு எதிராக திரும்பியதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள், இழிவாக நினைக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பிக் பாஸிடம் கூறினார். அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு உள்ளீர்கள் என பிக்பாஸ் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் வீட்டில் இருக்க மறுத்துவிட்டார் வனிதா.
மன உளைச்சல் உங்களைக் கொல்லட்டும்
வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து எதுவும் பேசாமல் இருந்த நிலையில், தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறை, ஆக்ரோஷமான உடல் நடத்தை, தவறான வார்த்தைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை உங்களைக் கொல்லக்கூடும்... நான் அதற்கு எதிரானவன், அதுவே என் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வைத்தது... மேலும் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பது என்னவென்று உனக்குத் தெரியும்.பிக்பாஸ்அல்டிமேட். என பதிவிட்டுள்ளார்.
வம்புக்கு இழுக்கும் வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் பெயர் கேட்டுவிடும், மன அழுத்தம் ஏற்படும் என அதில் பங்கேற்ற பலரும் கூறிவரும் நிலையில், வனிதாவும் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது வைத்துள்ளதை பார்க்கும் போது வனிதா விஜய் டிவியை வம்புக்கு இழுக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.