இப்போ தான் பாதி முடிச்சன் அப்போ மிதி.. வருத்தத்தில் வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி-2 படத்தில் தனது கதாப்பாத்திரத்தின் டப்பிங்கை பாதி முடிந்துவிட்டதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி-2 படத்தில் தனது கதாப்பாத்திரத்தின் டப்பிங்கை பாதி முடிந்துவிட்டதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி-2 என்ற பெயரில் உருவாகிவருகிறது.

இந்தப் படத்தில் நாயகன் விஷாலுக்கு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷும், வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழு, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் கம்பத்து பொண்ணு என்ற பாடல் வரிகள் அடங்கிய காணொளி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் வில்லி வரலட்சுமி, படத்தின் முதல் பாதிக்கான தனது கதாப்பாத்திரத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது மிகக் கடினமான ஒன்று, என்றும் சொல்லாமல் சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications











