Don't Miss!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- News சிறைக்குள் "பலே பிளான் போட்டு" மாம்பழங்களை அதிகம் சாப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிரபல வாரிசு நடிகை பரபர.. ஷாக்கில் கோலிவுட்!
சென்னை: பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வரவேண்டும் என பிரபல வாரிசு நடிகை கூறியிருப்பது தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ளது. ஹாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது.
நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை அறிவிக்க ஆரம்பிக்கப்பட்டதான் மீடூ. இதில் முதன் முதலில் பாலியல் தொல்லைகளை கூறியவர்கள் பாலிவுட் நடிகைகள் தான்.
முன்னணி வாரிசு நடிகை
இதனை தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என இந்தியா சினிமாவின் அத்தனை மொழி நடிகைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்தனர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார், பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
போடா போடி
வரலட்சுமி சரத்குமார் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வரலட்சுமி, நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
வில்லியாக..
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்துள்ளார் வரலட்சுமி. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வரலட்சுமி.
பாலியல் தொல்லை
பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பை அமையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை துணிச்சலாக கூறியிருக்கிறார்.
படுக்கைக்கு அழைப்பு
தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசிய ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி.
அதிர்ச்சியில் தமிழ் சினிமா
சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். பெண்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையான வரலட்சுமி இப்படி ஒரு புகாரை கூயிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.