Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிரபல வாரிசு நடிகை பரபர.. ஷாக்கில் கோலிவுட்!
சென்னை: பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வரவேண்டும் என பிரபல வாரிசு நடிகை கூறியிருப்பது தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ளது. ஹாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது.
நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை அறிவிக்க ஆரம்பிக்கப்பட்டதான் மீடூ. இதில் முதன் முதலில் பாலியல் தொல்லைகளை கூறியவர்கள் பாலிவுட் நடிகைகள் தான்.
முன்னணி வாரிசு நடிகை
இதனை தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என இந்தியா சினிமாவின் அத்தனை மொழி நடிகைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்தனர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார், பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
போடா போடி
வரலட்சுமி சரத்குமார் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வரலட்சுமி, நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
வில்லியாக..
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்துள்ளார் வரலட்சுமி. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வரலட்சுமி.
பாலியல் தொல்லை
பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பை அமையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை துணிச்சலாக கூறியிருக்கிறார்.
படுக்கைக்கு அழைப்பு
தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசிய ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி.
அதிர்ச்சியில் தமிழ் சினிமா
சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். பெண்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையான வரலட்சுமி இப்படி ஒரு புகாரை கூயிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.