Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'போதையில் அடி உதை.. விவாகரத்து கேட்டு தினமும் டார்ச்சர்'.. கணவர் மீது பிரபல நடிகை வழக்கு!
கட்டாக் : தனது கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாக நடிகை ஒருவர், வழக்குத் தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பிரபல ஒடிஷா நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. இவர் ஒடிஷாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அங்கு முன்னணி நடிகையாக இருக்கும் அவர் சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.
உங்க வீட்டு தொழிலை நான் பண்றதில்ல.. ஆபாசமாக பேசிய ரசிகருக்கு நடிகை கொடுத்த 'நச்' பதில்!
அனுபவ் மொகந்தி
இவரும் பிரபல ஒடிஷா நடிகருமான அனுபவ் மொகந்தியும் சில படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்தனர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நடிப்போடு அரசியலிலும் ஈடுபட்டு வந்த அனுபவ் மொகந்தி, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
கொடுமைப் படுத்துவதாக
இப்போது அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் அங்கு கட்சியின் துணை கொறடாவுமாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் அனுபவும் வர்ஷாவும் சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், அனுபவ் மொகந்திக்கு தன்னை கொடுமைப் படுத்துவதாக, அவரது மனைவி வர்ஷா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சித்ரவதை செய்கின்றனர்
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அனுபவ் மொகந்தி குடிகாரர், குடித்துவிட்டு என்னை அடித்து உதைப்பார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்குப் பின், அனுபவ் மொகந்தியும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அவர்கள் சித்ரவதை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
நஷ்ட ஈடாக
விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். என்னை மீண்டும் சினிமாவில் நடிக்கக் கூடாது என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கொடுமை படுத்துகின்றனர். அறுவெறுப்பாக திட்டுகின்றனர். என்னை மிரட்டுகின்றனர். நான் படங்களில் நடித்திருந்தால், எனக்கு வருமானம் கிடைத்திருக்கும். எனக்கு நஷ்ட ஈடாக, 15 கோடி ரூபாயை அனுபவ் வழங்க வேண்டும்.
நோட்டீஸ் வரவில்லை
வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம் 70 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும் இதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று அனுபவ் மொகந்தி கூறியுள்ளார். இந்த விவகாரம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!