Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வைக்கோல் புல்லுக்கு அருகே அரேபியன் குதிரை போல வாட்டசாட்டமாக நிற்கும் நடிகை வேதிகா!
சென்னை : தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் திறமை வாய்ந்த நடிகை என பெயர் எடுத்தவர் நடிகை வேதிகா
குறிப்பாக இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசியில் நடிப்பின் உச்சத்தை தொட்டிருபார்
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் ஜங்கிள் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் வேதிகா அரேபியன் குதிரை போல செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முனி
பார்த்தவுடனேயே பிடித்து விடும் முகம் அட்டகாசமான நடிப்பு திறமை என அனைத்து திறமைகளும் இருந்தும் தமிழில் மிகக் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை வேதிகா. அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் முனி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முனி திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே அதன் பிறகு வேதிகாவின் புகழும் தமிழ் சினிமாவில் பரவத் தொடங்கியது
ஆளே அடையாளம் தெரியாமல்
சக்கரக்கட்டி, காளை என தொடர்ந்து கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வந்த வேதிகாவுக்கு பரதேசி திரைப்படம் மிகப்பெரிய பிரேக்கிங் பாயின்ட்டாக அமைந்தது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் உண்மை தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர்களைப் பார்த்து பார்த்து தேர்ந்து எடுக்கும் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசியில் அதர்வா ஹீரோவாக நடித்திருந்தார். கதாநாயகியாக நடிகை வேதிகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல பளபளப்பாக இருந்தாலும் பரதேசியில் கதாபாத்திரத்திற்காக முழுவதும் கருநிற மேக்கப் அணிந்துகொண்டு ஆளே அடையாளம் தெரியாதது போல மாறிய வேதிகாவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
பரதேசி
பொதுவாக இயக்குனர் பாலாவின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து முன்னேறி விடுவார்கள் ஆனால் நடிகை வேதிகாவுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. பரதேசி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக காஞ்சனா 3ல் நடித்த வேதிகா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் ஜங்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வைக்கோல் புல்லுக்கு அருகே
இதுவரை படங்களில் குடும்ப பாங்கான நடிகையாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த வேதிகா இப்போது கவர்ச்சி காட்டவும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். அதற்காக சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது வைக்கோல் புல்லுக்கு அருகே செம ஹாட்டாக அரேபியன் குதிரை போல நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.