Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை
லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் வீணா மாலிக். கன்னட படம் ஒன்றிலும் நடித்துள்ளார். பிரபல பத்திரிகைக்கு டாப்லெஸாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
அவர் கடந்த 2013ம் ஆண்டு தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டக் என்பவரை திருமணம் செய்தார்.
துபாய்
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய வீணா கணவருடன் துபாயில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஆப்ராம்(2), அமல்(1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விவாகரத்து
கணவருக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இனியும் சேர்ந்து வாழ முடியாது என்பதால் விவாகரத்து அளிக்குமாறும் கோரி வீணா லாகூர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.
ஆசாத்
விவாகரத்து வழக்கில் வீணாவின் கணவர் ஆசாத் நேரில் ஆஜராகவில்லை. மேலும் விவாகரத்து மனு குறித்து பதில் அளிக்கவும் இல்லை. இதையடுத்து வீணாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிப்பு
வீணாவும், கணவரும் கடந்த மூன்று மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. வீணாவுக்கு மீண்டும் நடிக்க ஆசையாம். ஆனால் அவர் கணவரோ குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்குமாறு கூறினாராம். இதனால் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம்.