twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசித்ராவின் தந்தையைக் கொன்றது ஏன்?- கொள்ளையர்கள் வாக்குமூலம்

    By Siva
    |

    Vichitra
    ஸ்ரீபெரும்புதூர்: உல்லாசமாக வாழத் தான் நடிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக கைதான 2 வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.

    நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.

    இந்த வீட்டில் விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை 3 மணியளவில்
    முகமூடி அணிந்த இருவர் ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டில் புகுந்தனர். அவர்கள் வில்லியம்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். விசித்ராவின் தாயையும் தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மயங்கி விழுந்தார்.

    உடனே கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் விசித்ரா வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் திருடிச் சென்று பயன்படுத்தினர். செல்போன் டவரை வைத்து கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    நேற்று சுங்குவார்சத்திரத்தை அடுத்த சோகண்டி கூட்டு சாலையில் சென்ற 2 வாலிபர்களைப் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விசித்ராவின் தந்தையைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

    அவர்கள் இருவரும் செல்லம்பட்டிடையை அடுத்த ஏலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (29), வேலு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,

    நாங்கள் கிராமத்தில் எலி, அணில், பாம்பு ஆகியவைகளை வேட்டையாடி வந்தோம். கிராம மக்கள் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தோம். அப்போது வில்லியம்ஸ் அவரது மனைவி மேரி வசந்தா பண்ணை வீட்டில் அடிக்கடி வந்து தனிமையில் தங்கி வந்ததை நோட்டமிட்டோம். மேரி வசந்தா நிறைய நகைகளை அணிந்து இருப்பார். எங்களுக்கும் மற்றவர்களை போல் உல்லாசமாக வாழ ஆசையாக இருந்தது.

    கடந்த 2.6.11 அன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கும்போது அதை தடுத்த வாலிபர் மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.

    இதையடுத்து வில்லியம்ஸ் வீட்டிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம். சம்பவத்தன்று நள்ளிரவு வில்லியம்ஸ் வீட்டில் புகுந்து அவரை கத்தியால் குத்தினோம். அவர் அங்கேயே இறந்தார்.

    அவரது மனைவி மேரி வசந்தாவிடம் நகைகளை பறித்துக் கொண்டு அவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினோம் என்று கூறியுள்ளனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளிகளைப் பிடித்த தனிப்படையை ஐ.ஜி. சைலேந்திர பாபு பாராட்டி, பரிசு வழங்கி கௌரவித்தார்.

    English summary
    Police arrested 2 persons who allegedly killed actress Vichitra's father Williams and escaped with 30 sovereign jewels and Rs. 10, 000 cash. They were produced before the Sriperumbudur court and shut in Vellore prison.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X