செம டைட்... டீப் லோ நெக்…கருப்பு உடையில்.. வியர்க்க விறுவிறுக்க வைத்த வித்யா பாலன்!
மும்பை: பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் வித்யா பாலன்.
இவர் டர்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
இவர், தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருப்பார். அந்த படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அந்த காட்சி மனதை தொட்டுச்சென்றது.

பரினீதா
2003ம் ஆண் பாலோ தோகோ என்ற வங்காளத் திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயத்தைத் தொடங்கினார் வித்யாபாலன். இதையடுத்து இந்தியில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், பரினீதா திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

தேசிய விருது
அதையடுத்து லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி மற்றும் பூல் மலையா, ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களில் நடித்தார். பூல் மலையாவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதினைப்பெற்றார்.

நல்ல வரவேற்பு
அந்தப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் நல்ல வரவேற்றைப் பெற்றது. இதையடுத்து வித்யா பாலன் நட்கத் என்னும் குறும்படத்தில் நடித்தார். இப்படம் ஏராளமான விருதுகளை வென்றது.
வீட்டில் இருங்கள்
இவர் யுடிவு நிறுவனத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளசுகளை சுட்டி இழுக்கும் வகையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவில், உங்களுக்கு பிடித்தமான ஆடைகளை அணியுங்கள்..வீட்டில் இருங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவுவதால் இதை அவர் பதிவிட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











