Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நன்றி கெட்ட குஷ்பு-நேரம் சரியில்லாத வடிவேலு: விந்தியா தாக்கு
இது மிக முக்கியமான தேர்தல். கடந்த தேர்தலில் ஏமாந்து ஓட்டு போட்டுவிட்டீர்கள். அதன் பலனை அனுபவித்து விட்டீர்கள். ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது?, நாம் அப்படியே இருக்கிறோம். அதே வீடு. அதே கடை. அதே வியாபாரம். நமக்கு விடிவு இல்லை.
திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றம், மின்தடை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டுமல்ல, மற்ற பலரும் காரணம். ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்கள் நன்றாக இல்லை.
ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களை ஓட்டாண்டிகளாக்கி விட்டனர். இவர்களை நம்பிய மக்களுக்கு ஒரு ரூபாய் உளுத்துப் போன அரிசியை வழங்குகின்றனர்.
தற்போது, அவர்களுக்காக வடிவேலு பேசுகிறார். ஸ்பெக்ட்ரம் குறித்து அவர் பேசாதது ஏன்?. அதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லையா?. குஷ்பு அக்கா ஏ.சி காரில் போகிறார். அவருக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் செல்கின்றனர். அவருக்கு எப்படி மக்களின் கஷ்டம் தெரியும்?.
தமிழகத்தில் அராஜகம் அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தை காப்பாற்ற, ஊழல் செய்தவர்கள் தண்டனை பெற புரட்சித் தலைவியாம் தானைத் தலைவி ஜெயலலிதா அம்மா முதல்வராக வேண்டும். கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு தண்டனை. திமுகவுக்கு ஓட்டு போட்டால் ஐந்து ஆண்டுகள் தண்டனை. 2006ம் ஆண்டு தேர்தலில் ஏமாந்து ஐந்து ஆண்டு தண்டனையை அனுபவித்து விட்டீர்கள். இந்த முறை ஏமாந்து விடாதீர்கள்.
கருணாநிதி பகுத்தறிவாளர் என்கிறார். அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் அனைத்திலும் பூஜையறை உள்ளது. சாய்பாபா காலில் விழுந்து தயாளு அம்மாள் வணங்கினார். கருணாநிதி புகழ் பாடும் குஷ்பு, மசூதி, கோவில் என செல்பவர். அவர் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்திய போதுதான் தமிழ் பேசவே கற்றுக்கொண்டார்.
அதுவரை டப்பிங் குரல் தான். அந்த நன்றியை மறந்து விட்டார். வடிவேலு அண்ணா ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுக்கு நேரம் நல்லா இல்லை என்றார்.