Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஜெ. பயோபிக்கில் ஜெ-வாக நடிக்கவிருக்கும் நடிகை? - இயக்குநர் பதில்
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், அவரை மே மாதம் நடக்கும் பட பூஜையில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இயக்குநர் ரவிரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றி, அரசியலில் எம்ஜிஆரால் எவ்வாறு கொண்டு வரப்பட்டார்? பிறகு தன்னைச்சுற்றியிருந்த எதிரிகளுக்கு மத்தியில் துணிச்சலாக அரசியல் செய்த விதம் என பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுமாம்.
"தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். ஜெயலலிதாவின் முகச்சாயல் ஒத்துப்போகக்கூடிய ஒரு நடிகையைத்தான் தற்போது தேர்வு செய்து வைத்துள்ளோம். படத்தின் ஷூட்டிங் தொடங்கும்போது அந்த நடிகையை அறிமுகம் செய்வேன். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும்.' என இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார்.
இயக்குநர் ரவிரத்தினம் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து பரபரப்பு கிளப்பியர். அந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.