அய்யய்யோ கலவர பூமிக்கு அவர கூப்பிடும் யாஷிகா.. ஏம்மா இந்த கொலவெறி.. ஃபேன்ஸ் ரியாக்ஷன பாருங்க!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானர். அந்நிகழ்ச்சியில் அவர் மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார்.
இதனால் மக்களிடம் ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றார். ஆனால் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றத் தொடங்கினர்.

அஜித் வரனும்
இப்போதும் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை யாஷிகா, நடிகர் அஜித் குறித்து டிவிட்டியிருக்கிறார். அதாவது நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக பதிவிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நெட்டிசன்கள் பதில்
மேலும் என்னைப் போல் யாரெல்லாம் இப்படி நினைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்தின் அவரது டிவிட்டை பார்த்த் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வராமல் இருப்பது
தல வராம இருக்குறதுதான் நல்லது.. என்கிறார் இந்த நெட்டிசன்.
செமயா இருக்கும்
தல வந்தா செமயா இருக்கும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்ல இருக்கும்
உண்மையிலேயே அவரு டிவிட்டர்ல ஜாய்ன் பண்ணா நல்லாதான் இருக்கும், அவரோட எந்த படம் ரிலீஸ் ஆகும் அதே ஃபீல் வேற லெவல்ல இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
நடக்காது..
ஹேய் யாஷிகா உன் ஆசை நடக்காது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இங்கே நெகட்டிவிட்டி
ஏற்கனவே இங்க ரொம்ப நெட்டிவிட்டி இருக்கு.. அவரு வராம இருக்குறதுதான் நல்லது என்கிறார் இந்த நெட்டிசன்.
வீணாக்க மாட்டார்கள்
ஜென்டில்மேன்கள் அவர்களின் நேரத்தை வீணாக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் இவர்.
அதுக்குதான் காத்திருக்கிறோம்
ஆமாம் பேபி நாங்களும் அதுக்குதான் காத்திருக்கிறோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

கலவர பூமியாச்சே
அண்மையில் நடிகை மதுமிதா டிவிட்டரில் இணைந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இது கலவர பூமியாச்சே இங்கே ஏன் வந்தீங்க என்று கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











