Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது!
சென்னை: துணை நடிகை யாஷிகா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது காதலன் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் திருப்பூரைச் சேர்ந்த யாஷிகா(21). அப்படத்தைத் தொடர்ந்து சீரியல்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் யாஷிகா. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் யாஷிகா தற்கொலைக்கு முன்பு தனது தாய்க்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவு கிடைத்தது.
அதன்மூலம், யாஷிகா பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரைக் காதலித்ததும், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒரே வீட்டில் வசித்ததும் தெரிய வந்தது. மேலும், மோகன்பாபு திருமணம் செய்து கொள்ள மறுத்ததாலேயே யாஷிகா தற்கொலை செய்து கொண்டதும் உறுதியானது.
இது தொடர்பாக யாஷிகாவின் அம்மா வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் மோகன் பாபு மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மோகன்பாபுவைப் போலீசார் தேடி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மோகன்பாபு கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை' என்றும் மோகன்பாபு தெரிவித்துள்ளார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!