Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
கற்பழிப்பு பழி போட முயன்ற நிலா தன்னை கொலை செய்து விடுவதாக தயாரிப்பாளரும், இயக்குனரும் மிரட்டியதாக நடிகை நிலா கூறுவதை அந்த இருவரும்மறுத்துள்ளனர்,இயக்குனர் நந்தகுமார் கூறுகையில், நிலாவுக்கு தமிழ் மீது விருப்பமே இல்லை. அவருக்கு தமிழ், தமிழ் ரசிகர்கள் என்றாலேவேப்பங்காயாக உள்ளது. தமிழ்ப் படங்களில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவரிடம் உள்ளது.ஜாம்பவான் படப்படிப்பு கடந்த 3ம் தேதி முதல் இடைவிடாமல் நடந்து வருகிறது. நிலா இதுவரை 60 சதவீத காட்சிகளில் நடித்துவிட்டார். படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே அவர் சரியாக வருவதில்லை, ஒத்துழைப்பு தருவதில்லை.தமிழ் வேறு தெரியாது என்பதால் அவருக்கு வனச்தை சொல்லித் தருவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.முன்கோபமும் அவருக்கு அதிகம், ஏதாவது சொன்னால் முனுக்கென்று கோபித்துக் கொண்டு விடுவார். முதலில் அவர் ஒருஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த அறையின் கதவை அடிக்கடி வேகமாக மூடி மூடி ரகளை செய்ததால் ஹோட்டல் நிர்வாகம்அவரை வேறு ஹோட்டலுக்குப் போகுமாறு கூறி விட்டது.இதனால் இன்னொரு ஹோட்டலில் தங்க வைத்தோம். அவர் ஒருவருக்கு மட்டும் இதுவரை ரூ. 47 லட்சம் செலவு செய்து விட்டோம். கலாட்டா நடந்த நாளில் மட்டும் ஒன்னேகால்லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று, நல்ல தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி வைத்து குளிக்குமாறு கூறினோம். ஆனால்முடியவே முடியாது, குளிக்கமினரல் வாட்டர்தான் வேண்டும் என்றார்.எல்லோரும் கூறிப் பார்த்தும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. நடிகர் விஜயக்குமாரும் பலமுறை அவரிடம் பேசினார். அவரதுபேச்சையும் நிலா மதிக்கவில்லை. வேகமாக ஹோட்டலுக்கு சென்று விட்டார்.அங்கு சமாதானப்படுத்தி அழைப்பதற்காக சென்ற தயாரிப்பு மேலாளரை சேரைத் தூக்கி அடிக்கப் பாய்ந்துள்ளார்.அத்தோடு நில்லாமல், ஹோட்டல் வாசலுக்கு வந்து ரோட்டில் நின்று கொண்டு தயாரிப்பாளரைப் பற்றியும், என்னைப் பற்றியும்தரக்குறைவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் சப்தம் போட்டு திட்டினார்.இவ்வாறு செய்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய வேண்டியது வரும் என்று தயாரிப்பாளர் சத்யநாராயணா கூறியபோது,நீங்கள் புகார் செய்வதற்கு முன்பாக, என்னைக் கற்பழிக்க மயற்சித்தீர்கள் என்று நான் போலீஸில் புகார் செய்து விடுவேன் என்றுமிரட்டினார்.அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பெண் போலவே நடந்து கொள்ளவில்லை. குழந்தைத்தனமாக இருக்கிறார். சில சமயங்களில் அவர்செய்யும் காரியம் எங்களை வெறுப்படைய வைக்கிறது.இப்போது கூட அவர் திடீரென கோபித்துக் கொண்டதில் ஒரு காரியம் உள்ளது. அதாவது தெலுங்குப் படம் ஒன்றில் அவர் நடிக்கபுக் ஆகியுள்ளார். தெலுங்குப் படத்தில் அதிக சம்பளம் தருவார்கள்.எனவேதான் இதை சாக்காக வைத்துக் கொண்டு ஹைதராபாத்துக்குப் போய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார் என்றார் நந்தகுமார்.இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அழகப்பன் கூறுகையில், நிலா கூறுவது அனைத்தும் பொய் என்றுஅவரது கால்ஷீட் மேலாளர் உதயக்குமாரே தெரிவித்துள்ளார்.மேலும், தயாரிப்பாளர், இயக்குனர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.எனவே உடனடியாக ஒப்புக் கொண்டபடி ஜாம்பவான் படத்தை நிலா முடித்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.இனிமேலாவது வெளி மாநில நடிகைகளை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் நன்கு யோசிக்க வேண்டும் என்றார்அழகப்பன்.அழகப்பனின் இந்த நல்ல யோசனை நம்மவர்கள் மண்டையில் ஏறுமா?. இனிமேலாவது தமிழ்ப் பெண்களை தமிழ் சினிமாவில்நடிக்க விடுவார்களா?.
தன்னை கொலை செய்து விடுவதாக தயாரிப்பாளரும், இயக்குனரும் மிரட்டியதாக நடிகை நிலா கூறுவதை அந்த இருவரும்மறுத்துள்ளனர்,
இயக்குனர் நந்தகுமார் கூறுகையில், நிலாவுக்கு தமிழ் மீது விருப்பமே இல்லை. அவருக்கு தமிழ், தமிழ் ரசிகர்கள் என்றாலேவேப்பங்காயாக உள்ளது. தமிழ்ப் படங்களில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவரிடம் உள்ளது.
ஜாம்பவான் படப்படிப்பு கடந்த 3ம் தேதி முதல் இடைவிடாமல் நடந்து வருகிறது. நிலா இதுவரை 60 சதவீத காட்சிகளில் நடித்துவிட்டார். படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே அவர் சரியாக வருவதில்லை, ஒத்துழைப்பு தருவதில்லை.
தமிழ் வேறு தெரியாது என்பதால் அவருக்கு வனச்தை சொல்லித் தருவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
முன்கோபமும் அவருக்கு அதிகம், ஏதாவது சொன்னால் முனுக்கென்று கோபித்துக் கொண்டு விடுவார். முதலில் அவர் ஒருஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த அறையின் கதவை அடிக்கடி வேகமாக மூடி மூடி ரகளை செய்ததால் ஹோட்டல் நிர்வாகம்அவரை வேறு ஹோட்டலுக்குப் போகுமாறு கூறி விட்டது.
இதனால் இன்னொரு ஹோட்டலில் தங்க வைத்தோம்.
அவர் ஒருவருக்கு மட்டும் இதுவரை ரூ. 47 லட்சம் செலவு செய்து விட்டோம். கலாட்டா நடந்த நாளில் மட்டும் ஒன்னேகால்லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று, நல்ல தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி வைத்து குளிக்குமாறு கூறினோம். ஆனால்முடியவே முடியாது, குளிக்கமினரல் வாட்டர்தான் வேண்டும் என்றார்.
எல்லோரும் கூறிப் பார்த்தும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. நடிகர் விஜயக்குமாரும் பலமுறை அவரிடம் பேசினார். அவரதுபேச்சையும் நிலா மதிக்கவில்லை. வேகமாக ஹோட்டலுக்கு சென்று விட்டார்.
அங்கு சமாதானப்படுத்தி அழைப்பதற்காக சென்ற தயாரிப்பு மேலாளரை சேரைத் தூக்கி அடிக்கப் பாய்ந்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், ஹோட்டல் வாசலுக்கு வந்து ரோட்டில் நின்று கொண்டு தயாரிப்பாளரைப் பற்றியும், என்னைப் பற்றியும்தரக்குறைவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் சப்தம் போட்டு திட்டினார்.
இவ்வாறு செய்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய வேண்டியது வரும் என்று தயாரிப்பாளர் சத்யநாராயணா கூறியபோது,
நீங்கள் புகார் செய்வதற்கு முன்பாக, என்னைக் கற்பழிக்க மயற்சித்தீர்கள் என்று நான் போலீஸில் புகார் செய்து விடுவேன் என்றுமிரட்டினார்.
அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பெண் போலவே நடந்து கொள்ளவில்லை. குழந்தைத்தனமாக இருக்கிறார். சில சமயங்களில் அவர்செய்யும் காரியம் எங்களை வெறுப்படைய வைக்கிறது.
இப்போது கூட அவர் திடீரென கோபித்துக் கொண்டதில் ஒரு காரியம் உள்ளது. அதாவது தெலுங்குப் படம் ஒன்றில் அவர் நடிக்கபுக் ஆகியுள்ளார். தெலுங்குப் படத்தில் அதிக சம்பளம் தருவார்கள்.
எனவேதான் இதை சாக்காக வைத்துக் கொண்டு ஹைதராபாத்துக்குப் போய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார் என்றார் நந்தகுமார்.
இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அழகப்பன் கூறுகையில், நிலா கூறுவது அனைத்தும் பொய் என்றுஅவரது கால்ஷீட் மேலாளர் உதயக்குமாரே தெரிவித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர், இயக்குனர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே உடனடியாக ஒப்புக் கொண்டபடி ஜாம்பவான் படத்தை நிலா முடித்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேலாவது வெளி மாநில நடிகைகளை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் நன்கு யோசிக்க வேண்டும் என்றார்அழகப்பன்.
அழகப்பனின் இந்த நல்ல யோசனை நம்மவர்கள் மண்டையில் ஏறுமா?. இனிமேலாவது தமிழ்ப் பெண்களை தமிழ் சினிமாவில்நடிக்க விடுவார்களா?.