Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷகீலாவின் சுயசரிதை படத்தில் நடிக்கணுமா?: தெறித்து ஓடும் நடிகைகள்
சென்னை: கவர்ச்சி நடிகை ஷகீலாவின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் தயங்குகிறார்களாம்.
கவர்ச்சி நடிகை ஷகீலா சுயசரிதை எழுதியுள்ளார். அதில் தான் கவர்ச்சியில் மலையாள திரை உலகை ஆண்டது முதல் முன்னணி ஹீரோக்கள் தன்னை பார்த்து மிரண்டது வரை அனைத்தையும் எழுதியுள்ளார்.
இதனால் அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் ஷகீலா.
மம்மூட்டி, மோகன்லால்
கவர்ச்சியில் டாப் கியரில் சென்றபோது தனது படங்களை வைத்து முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலின் படங்களை பப்படமாக்கியது பற்றியும் ஷகீலா தனது சுயசரிதையில் எழுதி உள்ளாராம்.
ஷகீலா படம்
ஷகீலாவின் சுயசரிதையை வைத்து படம் எடுக்கவிருக்கிறார்கள். இதில் ஷகீலாவாக நடிக்க முன்னணி நடிகைகளை நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆள விடுங்க
முன்னணி நடிகைகளோ ஷகீலாவாக நடிக்க மறுத்து ஓடுகிறார்களாம். ஒரு காலத்தில் ஷகீலாவின் படம் ரிலீஸாகிறது என்றால் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய அஞ்சுவார்கள். அப்படி இருக்கையில் ஷகீலாவாக நடித்தால் கவர்ச்சியில் தாராளம் காட்ட வேண்டுமே.
விருது ஆசை
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போன்று ஷகீலாவின் படத்தில் நடித்தாலும் விருது நிச்சயம் என்று நடிகைகளிடம் கூறி வருகிறார்களாம்.
அஞ்சலி
சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் அஞ்சலி. இந்நிலையில் அவர் ஷகீலாவாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.