'எங்க மேலயும் கேஸ் போடுங்கப்பா'... வாண்டடாக வண்டியில் ஏறும் உத்தரவு மகாராஜா!
தன் படத்தின் மீதும் வழக்கு தொடர வேண்டும் என நடிகர் ஆடம்ஸ் கேட்டுக்கொண்டார்.
Recommended Video

சென்னை: யாராவது கேஸ் போட்டாலோ அல்லது எச்.ராஜா போன்றோர் ஏதாவது பேசினாலோ தனது படத்துக்கு புரோமோஷன் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கூறினார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பவர் ஆடம்ஸ். இவர் தற்போது உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் மூலம் வெள்ளித்திரை நடிகராக உயர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஆடம்ஸ், தங்கள் படத்தின் மீது யாராவது கேஸ் போட்டால், அது விளம்பரமாக அமையும் எனக் கூறினார்.

உத்தரவு மகாராஜா மூலம் பெரியதிரை
இதுகுறித்து அவர் கூறியதாவது, " உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் நண்பராக நான் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்துவிட்டு, இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வந்திருக்கிறேன்.

தேவையில்லாத புரோமோஷன்
விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள்.

கேஸ் போடுங்கள்
எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு)போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் கூட, அதுவும் படத்துக்கு ஒரு விளம்பரமாக இருக்கும்.

புரோமோஷன் தருகிறார்கள்
தேவையே இல்லாத படங்களுக்கு எல்லாம் கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற படங்களுக்கு புரோமோஷன் கிடைப்பதில்லை", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











