Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
போலீஸாரிடம் அடிவாங்கிய இசையமைப்பாளர்.... வேண்டுமென்றே வேடிக்கை பார்த்த ஜெயம் ரவி பட இயக்குனர்!
அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை : அடங்க மறு படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். போலீசாரிடம் அடிவாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கிய அடங்க மறு படம் கடந்த மாதம் 21ம் தேதி ரிலீசானது. இப்படத்துடன் மாரி 2, சீதக்காதி, கனா, கேஜிஎஃப், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகின.
2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!
இதில் அடங்கமறு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.
அடங்க மறு வெற்றி விழா
இதில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா, அழகம் பெருமாள், முனிஸ்காந்த், மைம் கோபி, இயக்குனர் கார்த்திக் தங்கவேல், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது இசையமைப்பாளர் சாம் சிஎஸ், மதுரையில் தான் அடிவாங்கிய சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.
மதுரை தியேட்டர்
இதுகுறித்து அவர் பேசியதாவது, " பொதுவாக நான் எந்த படத்துக்கும் தியேட்டர் விசிட் சென்றதில்லை. ஆனால் அடங்க மறு படத்துக்காக மதுரைக்கு தியேட்டர் விசிட் சென்றிருந்தேன். அப்போது அங்கு கடுமையான கூட்டம் நிலவியது.
அடி வாங்கினேன்
ஜெயம் ரவியும், இயக்குனரும் முன்னே சென்றுவிட்டனர். நான் அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக லத்தியால் அடித்தபோது, என் மீதும் பட்டது. இதை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை" எனக் கூறினார்.
இயக்குனர் கார்த்திக் தங்கவேல்
அவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல், "நான் வேண்டுமென்று தான் சாமை அடிவாங்கவிட்டேன். ஒரு அடி வாங்கவிட்டு தான், அவர் யார் என்பதை போலீசாரிடம் கூறினேன்", என்றார்.
என்ன பிரச்சினை
இதைக்கேட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் வியப்படைந்தனர். இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது என தெரியவில்லையே என பேசிக்கொண்டனர். ஆனால் தான் அடிவாங்கியதை சந்தோஷமாகவே எடுத்துக்கொண்டதாக இசையமைப்பாளர் சாம் கூறியது குறிப்பிடத்தக்கது.