Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்
சென்னை: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபி சரவணனும், பட்டதாரி படத்தில் நடித்த அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அபி சரவணனை சிலர் காரில் கடத்திவிட்டதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியுள்ளார் வீடு திரும்பியுள்ள அபி சரவணன்.
சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்
போலீஸ்
அபி சரவணனை அதிதி மேனன் ஆள் வைத்து கடத்தியதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் அதிதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவை அளித்துவிட்டு அதிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடத்தல்
அபி சரவணன் என்கிற சரவணகுமார் என் கணவர் இல்லை. அவரை நான் கடத்தவில்லை. ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை பிரிந்துவிட்டேன் என்றார் அதிதி.
புகார்
அபி சரவணன் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டது போன்று போலி ஆவணங்களை தயார் செய்திருக்கிறார். நான் அவரின் மனைவி என்று சமூக வலைதளங்களிலும் பொய்யாக தெரிவித்துள்ளார் என்று அதிதி தெரிவித்தார்.
அதிதி
ட்விட்டர் உள்ளிட்ட என் சமூக வலைதள கணக்குகள் கடந்த மாதம் ஹேக் செய்யப்பட்டன. என் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்தே அபி சரவணன் மீது போலீசில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன். எங்களுக்கு திருமணம் நடந்தது போன்று போலி ஆவணத்தை தயாரித்ததற்காகவும், என் சகோதரியை தாக்கியதற்காகவும் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என்று அதிதி கூறினார்.
-
Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
-
Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!