Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்
சென்னை: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபி சரவணனும், பட்டதாரி படத்தில் நடித்த அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அபி சரவணனை சிலர் காரில் கடத்திவிட்டதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியுள்ளார் வீடு திரும்பியுள்ள அபி சரவணன்.
சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்
போலீஸ்
அபி சரவணனை அதிதி மேனன் ஆள் வைத்து கடத்தியதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் அதிதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவை அளித்துவிட்டு அதிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடத்தல்
அபி சரவணன் என்கிற சரவணகுமார் என் கணவர் இல்லை. அவரை நான் கடத்தவில்லை. ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை பிரிந்துவிட்டேன் என்றார் அதிதி.
புகார்
அபி சரவணன் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டது போன்று போலி ஆவணங்களை தயார் செய்திருக்கிறார். நான் அவரின் மனைவி என்று சமூக வலைதளங்களிலும் பொய்யாக தெரிவித்துள்ளார் என்று அதிதி தெரிவித்தார்.
அதிதி
ட்விட்டர் உள்ளிட்ட என் சமூக வலைதள கணக்குகள் கடந்த மாதம் ஹேக் செய்யப்பட்டன. என் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்தே அபி சரவணன் மீது போலீசில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன். எங்களுக்கு திருமணம் நடந்தது போன்று போலி ஆவணத்தை தயாரித்ததற்காகவும், என் சகோதரியை தாக்கியதற்காகவும் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என்று அதிதி கூறினார்.