Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நடிகை அதிதி என் மனைவி, காரில் அழைத்துச் சென்று மிரட்டினார்கள்: அபி சரவணன்
Recommended Video
சென்னை: காரில் கடத்தப்பட்டது குறித்தும், நடிகை அதிதி மேனனுடன் திருமணம் நடந்தது குறித்தும் நடிகர் அபி சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அபி சரவணனும், நடிகை அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிதி மேனன் ஆள் வைத்து அபி சரவணனை கடத்தியதாக செய்திகள் வெளியாகின. வீடு திரும்பிய அபி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார்.
இதற்கிடையே அபிக்கும், தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று அதிதி தெரிவித்தார். மேலும் அபி மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார். இது குறித்து அபி சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அதிதி மேனன்
அதிதி மேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மையே. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம்.
நீதிமன்றம்
ஒரு நாள் நான் வெளியூர் சென்றிருந்தபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு அதிதி சென்றுவிட்டார். அதிதியை என்னுடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தில் வழத்து தொடர்ந்திருக்கிறேன்.
பொய்
எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், நான் போலி ஆவணங்களை காட்டி மிரட்டுவதாகவும் அதிதி சொல்வதில் உண்மை இல்லை. திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். சமூக சேவைக்காக திரட்டிய நிதியை வைத்து நான் வீடு, கார் வாங்கியதாக அதிதி கூறியதில் உண்மை இல்லை. கடன் வாங்கித் தான் வீடு, கார் வாங்கினேன்.
சட்டம்
அதிதி ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். ஒரு இயக்குநர் மீது கூட புகார் தெரிவித்தார். அதிதியுடன் சமரசம் செய்து வைப்பதாகக் கூறி சிலர் என்னை காரில் அழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார்கள். அதிதியுடன் மீண்டும் சேர்ந்த வாழ தயாராக உள்ளேன். அவர் தெரிவித்த புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்றார் அபி சரவணன்.
சினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை!