Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்
சென்னை: துருவ் ஒரு வித்தியாசமான நடிகர். அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்று நடிகை பிரியா ஆனந்த் கூறியுள்ளார். ஆதித்யா வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரியா ஆனந்த், நடிகர் விக்ரமை நாம் ஒரு நடிகராக அனைவரும் அறிவோம். ஆனால் அவர் மிகவும் அற்புதமான ஸ்பெஷல் தந்தை என்பதை நான் அவரிடமே பல முறை கூறியிருக்கிறேன் என்று புகழ்ந்தார்.
தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் ஒரு முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் ஒரு கவர்ச்சி, மாடர்ன், ஹோம்லி என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும், பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு வாமனன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஜெய், சந்தானம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரியா ஆனந்த் தமிழ் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசக்கூடியவர். அதோடு ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். அவருக்கு, தான் ஒரு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்து வருகிறது. ஆனால், சினிமாவில் நடிப்பார் என்பதை சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி!
தற்போது விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். தெலுங்கு மற்றும் கன்னட படத்திலும், அதே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரு மொழிகளை காட்டிலும் தமிழ் வெர்ஷனில் கூடுதல் சிறப்பாக நடித்துள்ளார்.
ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம், துருவ் மற்றும் பலரும் இப்படத்தில் பிரியாவின் நடிப்பை பற்றி பெரிதும் பாராட்டினார்.
மிகவும் அழகான, கவர்ச்சிகரமான ஒரு உடையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியா ஆனந்த், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய போது இப்படத்தில் நடித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றார். நடிகர் விக்ரமை நாம் ஒரு நடிகராக அனைவரும் அறிவோம். ஆனால் அவர் மிகவும் அற்புதமான ஸ்பெஷல் தந்தை என்பதை நான் அவரிடமே பல முறை கூறியிருக்கிறேன். அப்பா-மகன் என்ற அவர்களின் உறவு மற்றவர்களை விட மிகவும் இனிமையானது.
மேலும் நான் பல ஸ்டார் நடிகர்களின் மகன்களோடு நடித்துள்ளேன். ஆனால் துருவ் ஒரு வித்தியாசமானவர். அவருடன் இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் மிகவும் திறமையான நடிகர். அவரின் தந்தை அவருக்கு அப்படியே அவரின் நடிப்பு திறமையை கொடுத்துள்ளார் என்று பாராட்டினார். அவருக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் இந்த சினிமா உலகில் கிடைக்கவிருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் பெரும்பாலான தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். பிரியா ஆனந்த் மேலும் பல தமிழ் சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுகோள்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே